Published : 10 May 2025 09:37 AM
Last Updated : 10 May 2025 09:37 AM
பாகிஸ்தான் படைகள், இந்திய எல்லையில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. தற்போது இந்திய முப்படைகள் மட்டுமல்லாமல் துணை ராணுவமும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான டெர்ரிடோரியல் ஆர்மி 32 பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. இந்த டெர்ரிடோரியல் ஆர்மி துணை ராணுவத்தின் 14 பட்டாலியன்கள் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த 14 பட்டாலியன்களில் உள்ள வீரர்கள் பல்வேறு மாநில எல்லைப் பகுதிகளில் தாக்குதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் 14.75 லட்சம் ராணுவ வீரர்களும், 16 லட்சத்துக்கும் அதிகமான துணை ராணுவப் படையினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT