Published : 25 Apr 2025 07:04 AM
Last Updated : 25 Apr 2025 07:04 AM

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி: பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

பிஹாரின் மதுபானி நகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உடன், பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் உள்ளனர். | படம்: பிடிஐ |

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு தண்​டனை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். பிஹாரின் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: கிராமங்​கள் வளர்ச்சி அடைந்​தால்​தான் பாரதம் வளர்ச்சி அடை​யும் என்று மகாத்மா காந்தி கூறி​னார். இதை கருத்​தில் கொண்டு கிராமங்​களின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

நாடு முழு​வதும் 5.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் சேவை மையங்​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. இந்த மையங்​கள் மூலம் அரசின் அனைத்து சேவை​களும் வழங்​கப்​படு​கிறது. கடந்த 10 ஆண்​டு​களில் பஞ்​சா​யத்​துகளின் வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு சார்​பில் ரூ.2 லட்​சம் கோடி வழங்​கப்​பட்​டிருக்​கிறது.

நாடு முழு​வதும் ரயில், சாலை, விமான போக்​கு​வரத்து வசதி விரிவுபடுத்​தப்​பட்டு வரு​கிறது. இன்​றைய தினம் பாட்​னா, ஜெய்​நகர் இடையே நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் லட்​சக்​கணக்​கான மக்​கள் பயன் பெறு​வார்​கள்.

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி சுற்​றுலா பயணி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்டு உள்​ளனர். இந்த தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு ஒட்​டுமொத்த நாடும் துணை நிற்​கிறது. தாக்​குதலில் காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

பஹல்​காம் தாக்​குதலில் மகனை, சகோ​தரனை, வாழ்க்​கைத் துணையை இழந்து பலர் தவிக்​கின்​றனர். கன்​னடம், மராத்​தி, ஒடி​சா, குஜ​ராத்​தி, வங்க மொழி என பல்​வேறு மொழிகளை பேசும் சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​துள்​ளனர். கார்​கில் முதல் கன்​னி​யாகுமரி வரை மக்​கள் துயரத்​தில் மூழ்கி உள்​ளனர். இந்​தி​யா​வின் ஆன்மா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது.

தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். தீவிர​வாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களை தேடிக்கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு தீவிர​வா​தி​யும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களை துரத்​து​வோம். தீவிர​வா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்​தை​யும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்​டப்​படும்.

மனி​தாபி​மானத்​தின் மீது நம்​பிக்கை கொண்​ட​வர்​கள் இந்​தி​யா​வுக்கு துணை நிற்​பார்​கள் என்று உறு​தி​யாக நம்​பு​கிறேன். பஹல்​காம் தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்த பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் மக்​களுக்​கும் நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஒரு நிமிட மவுன அஞ்​சலி: பிஹாரின் மது​பானி நகரில் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அவர் தனது உரையை தொடங்​கும் முன்பு பஹல்​காம் தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களை நினை​வு​கூரும் வகை​யில் ஒரு நிமிட மவுன அஞ்​சலி செலுத்த அழைப்பு விடுத்​தார்.

இதை ஏற்று விழா​வில் பங்​கேற்ற அனை​வரும் தலை​வணங்​கி, கைகளை கூப்பி ஒரு நிமிடம் மவுன அஞ்​சலி செலுத்​தினர். பிரதமர் நரேந்​திர மோடி கண்​களை மூடி, கைகளை கூப்பி அஞ்​சலி செலுத்​தி​னார். மவுன அஞ்​சலிக்கு பிறகு பிரதமர்​ மோடி, ‘ஓம்​ சாந்​தி’ என்​று கூறி உயி​ரிழந்​தவர்​களின்​ ஆன்​மா ​சாந்​தியடைய கடவுளிடம்​ வேண்​டி​னார்​.

ஆங்​கிலத்​தில் எச்​சரிக்கை: பிஹார் நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யில் பேசி​னார். ஆனால் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் குறித்து பேசும்​போது அவர் ஆங்​கிலத்​தில் உரை​யாற்​றி​னார். தாக்​குதலில் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் மற்​றும் உலக நாடு​கள் புரிந்து கொள்​ளும் வகை​யில் ஆங்​கிலத்​தில் பேசி​ய​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இந்​திய உருக்கு மாநாடு, கண்​காட்சி மும்​பை​யில் நேற்று தொடங்​கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ஐந்து டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரத்தை எட்​டும் முனைப்​புடன் மத்​திய அரசு செயல்​பட்டு வரு​கிறது. இதில் உருக்கு உற்​பத்தி துறை​யின் பங்​களிப்பு முக்​கிய​மானது. சர்​வ​தேச அளவில் அதிக உருக்கு உற்​பத்தி செய்​யும் நாடு​களின் பட்​டியலில் பாரதம் 2-வது இடத்​தில் இருக்​கிறது.

வரும் 2047-ம் ஆண்​டில் 500 மில்​லியன் டன் ருக்கை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்த துறை​யில் அதிக வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க வேண்​டும். செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை உருக்கு துறை முழு​மை​யாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x