Last Updated : 20 Apr, 2025 06:32 AM

1  

Published : 20 Apr 2025 06:32 AM
Last Updated : 20 Apr 2025 06:32 AM

உ.பி.யில் 80% வக்பு நிலங்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது: மவுலானா கல்பே ஜாவேத் புகார்

புதுடெல்லி: ‘‘உ.பி.யில் 80% வக்பு நிலங்​கள் மாநில அரசின் ஆக்​கிரமிப்பில் உள்​ளன’’ என்று மஜ்லீஸ்​-எ-உலா​மா-ஹிந்த் அமைப்​பின் பொதுச் செய​லா​ளர் மவுலானா கல்பே ஜவேத் புகார் தெரி​வித்​துள்​ளார்.

உ.பி. தலைநகர் லக்​னோ​வின் பழம்​பெரும் ஆசீபீ மசூதி இமா​மாக கல்பே ஜாவேத் இருக்​கிறார். இவர் நேற்று செய்​தி​யா ளர்​களிடம் கூறிய​தாவது: வக்பு நிலத்​தில் 80 சதவீதம் மாநில அரசின் ஆக்​கிரமிப்பில் உள்​ளது. இதை சட்​டப்​பூர்​வ​மாக்​கவே புதிய வக்பு சட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. லக்​னோ​வில் அரசு அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள இந்​திரா பவன், ஜவஹர் பவனும் வக்பு நிலத்​தில் கட்​டப்​பட்​டுள்​ளன. உ.பி.​யில் காங்​கிரஸ் ஆட்​சி​யின்போது வக்பு நிலத்​தில் அதி​கபட்ச அரசு ஆக்​கிரமிப்பு நடந்​துள்​ளது. வக்பு நிலங்​களை ஆக்​கிரமிப்​ப​தில் காங்​கிரஸ் ஒரு குரு​வாக செயல்​பட்​டது. அதன் சீட​ராக தற்​போது பாஜக செயல்​படு​கிறது.

வக்பு திருத்த சட்​டம் ஏழைகள் மற்​றும் பெண்​களின் நலனுக்​காகக் கொண்டு வரப்​பட்​ட​தாக மத்​திய அரசு கூறுகிறது, ஆனால், அதன் பலன் என்ன என்​பதை அரசு கூற​வில்​லை. எத்​தனை ஏழைகள் பயனடைந்​துள்​ளனர் என்​பதை அரசு கூற வேண்​டும். இஸ்​லாமியர்​களின் உசை​னா​பாத் அறக்​கட்​டளை கடந்த 24 ஆண்​டு​களாக மாவட்ட ஆட்​சி​யரின் கீழ் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த அறக்​கட்​டளைக்கு கோடிக்​கணக்​கான வரு​வாய் உள்​ளது. ஆனால், எந்த முஸ்​லி​மும் இதனால் பயனடைய​வில்​லை. மாவட்ட நிர்​வாகத்​தின் மேற்​பார்வை இருந்தபோதி​லும் அறக்​கட்​டளை​யில் இருந்​த தங்​கம்​,வெள்​ளி பொருள்​ விற்​கப்​பட்​டுவிட்​டன. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x