Published : 14 Apr 2025 03:59 AM
Last Updated : 14 Apr 2025 03:59 AM

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர். படம்: பிடிஐ

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வில் பட்​டாசு தொழிற்​சாலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 2 பெண்​கள் உட்பட 8 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 7 பேர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

ஆந்​திர மாநிலம் அனகாபல்லி மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கொத்​தவுட்ல மண்​டலம் கைலாசபுரத்​தில் உள்ள பட்​டாசு தொழிற்​சாலை​யில் நேற்று மதி​யம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. ஆலை முழு​வதும் தீ மளமளவென பரவிய​தால் அங்​கிருந்தபட்​டாசுகள் சரமாரி​யாக வெடித்து சிதறின. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடி​யாக தீயை கட்​டுக்​குள் கொண்​டு​வந்​தனர். இதற்​கிடையே, போலீ​ஸார், மீட்பு குழு​வினரும் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்த விபத்​தில் 2 பெண்​கள் உட்பட 8 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 7 பேர் நரசிபட்​டினம் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இதில் பலரும் கிழக்கு கோதாவரி மாவட்​டம் சமர்​ல​கோட்டா கிராமத்தை சேர்ந்​தவர்​கள் என தெரிய​வந்​துள்​ளது. இந்த விபத்​தில் தொழிற்​சாலை கட்​டிடத்​தின் சுற்​றுச்​சுவர் முழு​வதும் இடிந்து விழுந்​தது.

விசா​ரணைக்கு உத்​தரவு: பட்​டாசு ஆலை தீ விபத்து குறித்து அதிர்ச்சி தெரி​வித்​துள்ள ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, காயமடைந்​தவர்​களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்​கு​மாறு மாநில உள்​துறை அமைச்​சர் அனி​தா, மாவட்ட ஆட்​சி​யர் விஜயா கிருஷ்ணன் ஆகியோ​ருக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

அமைச்​சர், ஆட்​சி​யர் மற்​றும் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரை தொலைபேசி​யில் தொடர்பு கொண்​டு, விபத்து குறித்து கேட்​டறிந்​தார். விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார். தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்ள ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் தலை​வர் ஜெகன் மோகன் ரெட்​டி, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு தேவை​யான உதவி​களை அரசு செய்ய வேண்​டும் என வலி​யுறுத்தி உள்​ளார். கட்சி நிர்​வாகி​கள் தங்​களால் இயன்ற உதவி​களை செய்​ய வேண்​டும்​ என்று அறி​வுறுத்​தி உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x