Last Updated : 11 Apr, 2025 07:17 AM

 

Published : 11 Apr 2025 07:17 AM
Last Updated : 11 Apr 2025 07:17 AM

356 கிராம நூலகங்கள் உ.பி.யில் இன்று தொடக்கம்

படம்: மெட்டா ஏஐ

வாராணசி மாவட்ட ஆட்சியரும் தென்​காசி​யின் கடையநல்​லூர் தமிழருமான ராஜலிங்​கம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் கூறிய​தாவது: ‘வா​ராணசி​யின் வளர்ச்​சிக்​காக, நாட்​டின் பல்​வேறு முக்​கிய பொதுநல அமைப்​பு​கள் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் இடப்​பட்டு பல திட்​டங்​கள் செய​லாகின்​றன. இந்த பட்​டியலில் ஒன்​றாக இம்​மாவட்​டத்​தில் 356 கிராமப்​புற நூல​கங்​கள் அமைக்கப்பட்டுள்​ளன. இதில், கிராம​வாசிகள் படிக்​கும் வகை​யில் நூல்​களும், பயிற்​சிபெறும் வகை​யில் இணை​ய​வச​தி​களு​டன் கூடியக் கணினிகளும் இடம்​பெற்​றுள்​ளன.

கிராம நூல​கங்​கள் அமைக்க, கொல்​கத்​தா​வின் ராஜா​ராம் மோஹன்​ராய் பவுண்​டேஷன் எனும் அறக்​கட்​டளை​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நூல​கங்​களின் மதிப்பு ரூ.7.12 கோடி ஆகும். வாராணசி​யின் நூல​கங்​கள் பெறும் பலனை பொறுத்து இந்த திட்​டம் உபி முழு​வ​தி​லும் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

கடந்த 2023-ல் வாராணசி​யில் கிராமப்​புறங்​களின் 257 பள்​ளி​களில் இலவச ஆங்​கில ஆன்​லைன் வகுப்​பு​கள் துவக்​கப்​பட்​டன. இது, சென்னை ஐஐடி​யின் பிர​வர்​தக் டெக்​னாலஜிஸ் அறக்​கட்​டளை மற்​றும் தமிழகத்​தின் ஓபன்​மென்​டர் அறக்​கட்​டளை​யுடன் இணைந்து நடத்​தப்​படு​கிறது. இது தற்​போது உபி முழு​வதும் அமலாகி, வட இந்​தியா உள்​ளிட்ட இதர மாநிலங்​களில் ‘வித்யா சக்​தி’ எனும் பெயரில் நடை​பெறுகிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x