Published : 08 Apr 2025 07:11 AM
Last Updated : 08 Apr 2025 07:11 AM
ஹைதராபாத்: இந்தியாவில் விண்வெளி துறையில் ஈடுபட முதல் நிறுவனமாக ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், விண்வெளியில் ஏவக் கூடிய ராக்கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டுக்கு இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக, விக்ரம் -1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ராக்கெட் இன்ஜின் 3 நிலைகளை கொண்டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டின் 3-வது கட்ட சோதனையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த ராக்கெட்டின் 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஸ்கைரூட் நடத்திய ராக்கெட் 3-வது இன்ஜினுக்கு ஏவுகணை தந்தை என்று போற்றப்படும் கலாம் - 100 என பெயரிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT