Published : 08 Apr 2025 06:20 AM
Last Updated : 08 Apr 2025 06:20 AM

வக்பு மசோதாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட மணிப்பூர் பாஜக தலைவர் வீடு தீ வைத்து எரிப்பு

இம்பால்: வக்பு மசோ​தாவுக்கு ஆதர​வாக சமூக வலை​தளங்​களில் கருத்து பதி​விட்ட மணிப்​பூரைச் சேர்ந்த பாஜக மூத்த தலை​வரின் வீடு தீவைத்து எரிக்​கப்​பட்​டது. மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் முகமது அஸ்​கர் அலி. இவர் பாஜக சிறு​பான்​மை​யினர் பிரிவு தலை​வ​ராக உள்​ளார்.

இவரது வீடு தவு​பால் மாவட்​டம் லிலாங் சட்​டப் பேர​வைத் தொகு​தி​யின் சம்ப்​ரு​கோங் மேமேய் பகு​தி​யில் அமைந்​துள்​ளது. அண்​மை​யில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு மசோ​தா, சட்​டத்​துக்கு ஆதர​வாக சமூக வலை​தளங்​களில் முகமது அஸ்​கர் அலி கருத்​துகளைப் பதி​விட்டு இருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் பிற்​பகல் 7 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட முஸ்​லிம்​கள் உருட்​டுக்கட்​டை, கல், கத்​தி, கோடாரி போன்ற ஆயுதங்​களு​டன் அஸ்​கர் அலி​யின் வீட்டை சூழ்ந்​து​கொண்​டனர். பின்​னர் அவரது வீட்​டைத் தாக்கி அவரது வீட்​டுக்​குத் தீவைத்​தனர். அவரது வீட்​டில் யாரும் இல்​லாத​தால் எந்த உயிர்ச்​சேத​மும் ஏற்​பட​வில்​லை. இதையடுத்து போலீ​ஸார் அங்கு விரைந்து வந்து கும்​பலை விரட்​டியடித்​தனர். இதைத் தொடர்ந்து அங்கு 144 தடை​யுத்​தரவை ஆட்​சி​யர் பிறப்​பித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களில் அஸ்கர் அலி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நான் மன்​னிப்​புக் கேட்​டுக் கொள்​கிறேன். நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு மசோ​தாவை நான் எதிர்க்​கிறேன், அது உடனடி​யாக ரத்து செய்​யப்​பட வேண்​டும்​’’
என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x