Last Updated : 06 Apr, 2025 06:25 AM

5  

Published : 06 Apr 2025 06:25 AM
Last Updated : 06 Apr 2025 06:25 AM

இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம்: ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது

தீரேந்​திர கிருஷ்ண சாஸ்​திரி

புதுடெல்லி: ​பாஜக ஆளும் மத்​திய பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்​டத்​தின் சத்​தர்​பூரில் உள்​ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனு​மர் கோயில் உள்​ளது.

இதன் தலைமை அர்ச்​சகர் தீரேந்​திர கிருஷ்ண சாஸ்​திரி, பாகேஷ்வர் தாம் ஜன்​சேவா சமிதி என்ற சமூக நல அமைப்​பின் தலை​வ​ராக​வும் உள்​ளார். இந்த அமைப்​பின் சார்​பில் கோயிலுக்கு அரு​கில் உள்ள பரந்த பகு​தி​யில் ஒரு இந்து கிராமத்தை உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளார். இதற்​காக அவர் பூமி பூஜை செய்து கட்​டிட வேலைகளை​யும் தொடங்கி வைத்​துள்​ளார்.

இந்​தி​யா​வின் முதல் இந்து கிராம​மாக இது அடுத்த 2 ஆண்​டு​களில் அமைக்​கப்பட உள்​ளது. சனாதனத்தை பின்​பற்​றாதவர்​கள் இந்த கிராமத்​தில் நுழைய அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். இது குறித்து தீரேந்​தர் சாஸ்​திரி கூறும்​போது, ‘‘இந்து தேசத்​தின் கனவு ஓர் இந்து வீட்​டில் இருந்து தொடங்​கு​கிறது. ஒரு இந்து வீடு, இந்து கிராமம், இந்து மாவட்​டம், இந்து மாநிலம் மற்​றும் இந்து அரசு ஆகிய​வற்​றைக் கொண்ட பின்​னரே, இந்து தேசம் எனும் கனவு நிறைவேறும். நான் அமைக்​கும் இந்த கிராமம், 1,000 இந்து குடும்​பங்​கள் வசிக்​கும் வகை​யில் தயா​ராகிறது. இந்து மதம் மற்​றும் சனாதன தர்​மத்​தைப் பின்​பற்​று​பவர்​களுக்கு இக்​கி​ராமத்​தில் நிலம் வழங்​கு​கிறோம். இதற்​காக சமி​தி​யால் இலவச​மாக வழங்​கப்​படும் நிலத்தை மற்​றவர்​கள் வாங்​கவோ, விற்​கவோ முடி​யாது. இக்​கி​ராமத்​தில் இந்​துக்​கள் அல்​லாதவர்​கள் நுழைய தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. சனாதனத்​தில் நம்​பிக்கை கொண்​டிருந்​தால் கிராமத்​துக்​குள் வரலாம்’’ என்​றார்.

முன்​ன​தாக, ஒரு வீடியோ வெளி​யிட்ட தீரேந்​தர் சாஸ்​திரி, ‘‘இந்து கிராமம் உரு​வாக்​கு​வதற்கு முன்​பாக, ஒவ்​வொரு வீட்​டிலும் கிராமத்​தி​லும் தீவிர இந்​துக்​களை உரு​வாக்​கும் பணி தொடங்​கும். இதற்​கான பிரச்​சா​ரம் இந்த மாதம் தொடங்​கு​கிறது’’ என்றார்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x