Published : 03 Mar 2025 05:06 AM
Last Updated : 03 Mar 2025 05:06 AM

ஓராண்டுக்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: கோவையை சேர்ந்த சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி சுந்தரராஜ் உறுதி

ராய்ப்பூர்: ஓராண்​டுக்​குள் சத்தீஸ்​கரில் மாவோயிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று சத்தீஸ்கர் போலீஸ் மூத்த அதிகாரி சுந்​தரராஜ் தெரி​வித்​துள்ளார்.

சத்தீஸ்கரில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்​பூர், நாராயண்​பூர் உள்ளிட்ட மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​களின் ஆதிக்கம் உள்ளது. சத்தீஸ்கர் காவல் துறை​யின் மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு அதிரடிப்​படை, மத்திய அரசின் சிஆர்​பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் ஒன்றிணைந்து மாவோ​யிஸ்ட் தீவிர​வா​திகளை வேட்​டை​யாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சூழலில் சத்தீஸ்​கரின் பஸ்தர் பகுதி போலீஸ் ஐஜி சுந்​தரராஜ் கூறிய​தாவது: கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சத்தீஸ்​கரில் 310 மாவோ​யிஸ்ட் தீவிர​வா​திகள் சுட்டுக் கொல்​லப்​பட்​டனர். தற்போது சுமார் 400 தீவிர​வா​திகள் மட்டுமே வனப்​பகு​தி​களில் பதுங்கி உள்ளனர். அவர்களை வேட்​டை​யாடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்ளது. மாவோ​யிஸ்ட் மத்திய குழுவை சேர்ந்த பலர் என்க​வுன்ட்​டரில் சுட்டுக் கொல்​லப்​பட்டு உள்ளனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் சத்தீஸ்​கரில் மாவோ​யிஸ்ட் தீவிர​வாதத்தை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்​டுள்​ளார். இதன்படி ஓராண்​டுக்​குள் சத்தீஸ்கர் முழு​வதும் மாவோ​யிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும். மாவோ​யிஸ்ட் தீவிரவாத அமைப்பு​களில் இணைந்​திருக்​கும் தீவிர​வா​திகள் ஆயுதங்களை ஒப்படைத்து​விட்டு சரண் அடைய​லாம். அவர்​களுக்கான கதவு திறந்து இருக்​கிறது. இல்லை​யெனில் பாது​காப்பு படை வீரர்களை அவர்கள் நேருக்கு நேர் எதிர்​கொள்ள நேரிடும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு சத்தீஸ்​கரில் வன்முறையே நடைபெறாது என்ப​தற்கு உத்தர​வாதம் கொடுக்க முடி​யாது. மாவோ​யிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி​களில் பாது​காப்பு படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடு​வார்​கள். மக்கள் வளர்ச்​சியை விரும்​பு​கின்​றனர்.

தங்கள் பகுதி​களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்​வ​தில் ஆர்வம் காட்டு​கின்​றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்று​வ​தில் காவல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்ளார். சத்தீஸ்​கரில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​திகளை வேட்​டை​யாடும் பணிக்கு தலைமையேற்று இருக்​கும் ஐஜி சுந்​தரராஜ், தமிழ்​நாட்​டின் கோவை மாவட்டம் சரவணம்​பட்​டியை சேர்ந்​தவர் ஆவார். கடந்த 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக ப​தவி​யேற்ற அவர் சத்​தீஸ்​கரில் சட்​டம், ஒழுங்கை நிலைநாட்ட அ​திதீ​விரமாக பணி​யாற்றி வருகிறார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x