Published : 03 Mar 2025 04:57 AM
Last Updated : 03 Mar 2025 04:57 AM

தேர்தல் வருவதால் கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் செயல்பட ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: கேரள சட்டப்​பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலை​யில், காங்​கிரஸ் கட்சி​யினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்​டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதற்காக அவர், கேரள காங்​கிரஸ் தலைவர்​களுடன் நிற்​கும் பழைய புகைப்​படத்தை பகிர்ந்து “ஒளிமையமான எதிர்​காலத்தை நோக்கி, அவர்கள் ஒன்றிணைந்து நிற்​கிறார்​கள்” என்ற கருத்தை பதிவிட்​டுள்​ளார். காங்​கிரஸ் கட்சி உயர்​மட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘காங்​கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் வியூ​கத்தை கவனத்​தில் கொள்ள வேண்​டும். கட்சி கொள்​கைக்கு முரணான அறிக்கைகளை வெளி​யிடுவதை தவிர்க்க வேண்​டும்” என்று வலியுறுத்​தி​யிருந்​தார். பிரதமர் மோடி, கேரள இடதுசாரி அரசு ஆகியவற்றை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டி வரும் நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x