Published : 28 Feb 2025 04:20 AM
Last Updated : 28 Feb 2025 04:20 AM
முன்ஜாமீன் பெறுவது சரக்கு சேவை வரி சட்டம் மற்றும் சுங்க சட்டத்துக்கும் பொருந்தும். எப்ஐஆர் இல்லாவிட்டாலும் ஒருவர் கைதுக்கு முன்பாக ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்ற முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வழக்கில் முன்ஜாமீன் பெறுவது தொடர்பாக ராதிகா அகர்வால் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பு விவரம்:
குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தில் உள்ள முன்ஜாமீன் போன்ற விவகாரங்கள், சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் உள்ள நபர்களுக்கும் பொருந்தும்.
ஜிஎஸ்டி மற்றும் சுங்க சட்டங்களின் கீழ் கைதை எதிர்கொள்ளும் நபர்கள், எப்ஐஆர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே முன்ஜாமீன் பெற உரிமை உண்டு. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT