Published : 22 Feb 2025 06:18 AM
Last Updated : 22 Feb 2025 06:18 AM

சம்பல் கலவரத்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் சதி: 4,400 பக்க குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்

பரேலி: சம்பல் பகுதி​யில் கலவரம் ஏற் படுத்த ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி செய்​துள்ளனர் என்று சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்​துள்ள 4,400 பக்க குற்​றப்​பத்​திரி​கை​யில் குற்றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்​டதாக கூறப்​படும் ஷாஹி ஜமா மசூதி, கோயிலை இடித்து​விட்டு கட்டப்​பட்​டுள்ளதாக குற்றம் சாட்​டப்​பட்​டது. இதுதொடர்பான வழக்​கில், மசூதி​யில் ஆய்வு நடத்த இந்திய தொல்​லியல் துறைக்கு நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதையடுத்து மசூதி​யில் தொல்​லியல் துறை​யினர் ஆய்வு நடத்​தினர். இரண்​டாவது கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தொல்​லியல் துறை​யினர் ஆய்வு நடத்த சென்ற போது பெரும் கலவரம் ஏற்பட்​டது.

அப்போது ஏற்பட்ட கலவரத்​தில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் 5 பேர் உயிரிழந் தனர். இந்நிலை​யில், கூடுதல் தலைமை மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் நீதிபதி அர்ச்சனா சிங்​கிடம் 4,400 பக்க குற்​றப்​பத்​திரி​கையை, போலீஸ் அதிகாரி குல்​தீப் குமார் மற்றும் மாவட்ட அரசு வழக்​கழிஞர் ஹரி ஓம் பிரகாஷ் ஆகியோர் நேற்று​முன்​தினம் தாக்கல் செய்​தனர். அதில் குற்றம் சாட்​டப்​பட்​ட​வர்​களின் 79 பேரின் பெயர்கள் இடம்​பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறை​யில் உள்ளனர்.

இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்​னோய் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சம்பல் பகுதி​யில் கலவரம் நடைபெற்ற இடத்​தில் இருந்து துப்​பாக்கி தோட்​டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அவை பாகிஸ்​தான் மற்றும் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்​டவை. ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள
ஷாரிக் சதா என்பவர்​தான் இந்த கலவரத்தை தூண்​டி​விட்​டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பல் பகுதியை சேர்ந்த ஷாரிக், கார்களை திருடும் தாதா கும்பலை சேர்ந்​தவர்.

டெல்லி - என்சிஆர் பகுதி​யில் மட்டும் இவர் 300-க்​கும் மேற்​பட்ட கார் திருட்​டில் சம்பந்தப்​பட்​டுள்​ளார். தாவூத் இப்ராகிம் கும்​பலுட​னும் பாகிஸ்​தானின் ஐஎஸ்​ஐ​யுட​னும் அவருக்கு தொடர்பு உள்ளது. ஒரு கட்டத்​தில் போலி பாஸ்​போர்ட் மூலம்ஐக்கிய அரபு அமீரகத்​துக்கு தப்பியோடி​யுள்​ளார். அங்கிருந்து சம்பல் கலவ ரத்​துக்கு சதி திட்டம் தீட்​டியதற் கான ஆதாரங்களை சேகரித்​துள்ளோம். ஷாரிக் கும்பலை சேர்ந்​தவர்​கள்​தான் சம்பல் பகுதி​யில் துப்​பாக்​கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்​படை​யில் தற்போது குற்​றப்​பத்​திரிகை தாக்கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த விவகாரத்​தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியா​வுர்ரகுமான் பார்க், உள்ளூர் எம்எல்ஏஇக்பால் மொகமூ​தின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோ​ருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு இருக்​கிறது. அதனால், அவர்​களுடைய பெயர்​களும் குற்​றப்​பத்​திரி​கை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு ​போலீஸ் எஸ்​.பி. கிருஷ்ண கு​மார்​ பிஸ்​னோய்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x