Published : 02 Feb 2025 09:21 AM
Last Updated : 02 Feb 2025 09:21 AM

மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

புதுடெல்லி: மாலத்​தீவு​களுக்கு நிதி​யுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதி​யாண்​டில் வழங்​க​வுள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்கல் செய்​யப்​பட்ட பட்ஜெட் உரையில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் கூறிய​தாவது: கடந்த ஆண்டு நமது அண்டை நாடான மாலத்​தீவு​களுக்கு நிதி​உதவியாக ரூ.470 கோடியை இந்தியா வழங்​கியது. இது வரும் நிதி​யாண்​டில் ரூ.600 கோடியாக அதிகரிக்​கப்​படும்.

வெளி​நாடு​களுக்கு வழங்​கப்​படும் மொத்த நிதி​யுதவி ரூ.4,883 கோடியி​லிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்​கப்​படும். மத்திய வெளி​யுறவு அமைச்​சகத்​துக்கு வரும் நிதி​யாண்​டில் ரூ.20,516 கோடி ஒதுக்​கப்​படும். இந்தியா​வைச் சுற்றி​யுள்ள பல நாடு​களுக்கு இந்தியா நிதி​யுதவியை அவ்வப்​போது அளித்து வருகிறது. இந்த நிதி மூலம் அந்த நாடு​களில் உள்கட்​டமைப்பு வசதிகள் மேம்​படுத்​தப்​படும். அந்தவகை​யில் ​தான் தற்போது மாலத்​தீவு​களுக்கு ரூ.600 கோடியை இந்தியா வழங்​க​வுள்​ளது.

இதேபோல் பூடானுக்கு ரூ.2,150 கோடி​யும், ஆப்கானிஸ்​தானுக்கு ரூ.100 கோடி​யும், மியான்​மருக்கு ரூ.350 கோடி​யும், நேபாளத்​துக்கு ரூ.700 கோடி​யும், இலங்​கைக்கு ரூ.300 கோடி​யும், வங்கதேசத்​துக்கு ரூ.120 கோடி​யும் இந்த ஆண்டு ஒதுக்​கீடு செய்யப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x