Published : 29 Jul 2014 07:11 PM
Last Updated : 29 Jul 2014 07:11 PM

இமாச்சல்: பேருந்து பள்ளத்தில் விழுந்து 20 பேர் பலி

சிம்லாவுக்கு 65 கிமீ தொலைவில் பேருந்து ஒன்று பெரும் பள்ளத்தில் விழுந்ததில் 20 பேர் பலியாயினர்.

30 பயணிகளுடன் இமாச்சல சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சிம்லாவிலிருந்து சவேராகுத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, பசந்த்பூர்-கிங்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து கடர்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்து பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்தது.

இதில் அந்தப் பேருந்து சின்னாபின்னமானது. இதுவரௌஇ 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காயமடைந்த 7 பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருந்து பள்ளம் நோக்கிச் செல்வதைக் கண்ட ஓட்டுனர் ஜன்னலில் இருந்து குதித்து உயிர்தப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x