Published : 13 Nov 2025 06:19 AM
Last Updated : 13 Nov 2025 06:19 AM

வரலாறு காணாத அளவில் கரியமில வாயு வெளியேற்றம்: காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் தகவல்

சென்னை: வரலாற்​றில் இல்​லாத அளவுக்கு இந்​தி​யா​வில் கரியமில வாயு (கார்​பன் டை ஆக்​சைடு) வெளி​யேறி​உள்​ள​தாக​வும், மின் கட்​டமைப்பு அதிக கார்​பன் அடர்த்​தி​யான​தாக மாறி​யுள்​ள​தாக​வும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே தெரி​வித்​துள்​ளார்.

ஜி.எஸ்​.ஹெச் இந்​தியா லிமிடெட் நிறு​வனம் சார்​பில் நிலை​யான எரிசக்தி மாற்​றம் குறித்த கருத்​தரங்​கம் சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. ‘பசுமைப் பொறி​யியலின் ஈடு​பாடு’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற இக்​கருத்​தரங்​கில் தமிழக சுற்​றுச்​சூழல் மற்​றும் காலநிலை மாற்​றத் துறை​யின் கீழ் இயங்​கும் தமிழ்​நாடு காலநிலை மாற்​றத் திட்​டத்​தின் உதவி இயக்​குநர் கிரிஷ் பால்வே பங்​கேற்று உரை​யாற்​றி​னார்.

அவர் பேசி​ய​தாவது: ஐக்​கிய நாடு​கள் சபை வெளி​யிட்ட அறிக்​கை​யின்​படி, 2024-ல் இந்​தியா தனது வரலாற்​றில் இல்​லாத அளவுக்கு அதி​கபட்​ச​மாக 57,700 மில்​லியன் டன் கரியமில வாயுவை வெளி​யிட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்​டை​விட 7 சதவீதம் அதி​க​மாகும். இதற்கு நிலக்​கரி சார்ந்த அனல் மின் நிலை​யங்​களே 40 சதவீதத்​துக்​கும் மேல் காரண​மாகும். நாட்​டில் புதைபடிவ​மற்ற எரிசக்தி திறன் தற்​போது பாதி​யளவை எட்​டி​யுள்​ளன. இருப்​பினும், நமது மின் கட்​டமைப்பு கணிச​மான அளவில் அதிக கார்​பன் அடர்த்​தி​யான​தாக மாறி​யுள்​ளது.

அதன்​படி 2020-க்​கும் 2024-க்​கும் இடை​யில், ஒரு மெகா​வாட் மணி நேர மின்​சா​ரத்​துக்கு வெளி​யேற்​றப்​படும் கரியமில வாயு​வின் அளவு 0.703 டன்​னில் இருந்து 0.727 டன்​னாக அதி​கரித்​துள்​ளது. இதற்கு காரணம், சூரிய மற்​றும் காற்​றாலைகள் 15 முதல் 25 சதவீதத்​துடன் மட்​டுமே செயல்​படும் நிலை​யில், நிலக்​கரி ஆலைகள் 65 முதல் 90 சதவீதம் வரை தொடர்ந்து இயங்​கு​வதே ஆகும்.

இந்​திய எரிசக்தி திறன் பணி​யகத்​தின் திட்​டங்​கள் மூலம் 2017 முதல் 2023 வரை 1.29 பில்​லியன் டன் கரியமில வாயு வெளி​யேற்​றம் தவிர்க்​கப்​பட்டு ரூ.7.6 லட்​சம் கோடி சேமிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, எரிசக்தி திறன் தூய்​மை​யான எரிசக்தி உத்​தி​யின் மைய​மாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில் மணிப்​பூர் ஐஐஐடி இயக்​குநர் கே.​பாஸ்​கர், இந்​திய தொழில் துறை கூட்​டமைப்​பின் முதன்மை ஆலோ​சகர் எஸ்​.ரகுப​தி, கேரள எரிசக்தி மேலாண்மை மையத்​தின் இயக்​குநர் ஆர்​.ஹரிக்​கு​மார், இந்​திய பசுமைக் கட்​டிட கவுன்​சில் சென்னை தலை​வர் எஸ்​.மகேஷ் ஆனந்த், ஜி.எஸ்​.ஹெச் இந்​தியா லிமிடெட் நிறு​வனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி எம்​.நூருல்​ அமீன் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x