Published : 11 Nov 2025 09:16 AM
Last Updated : 11 Nov 2025 09:16 AM

டெல்லியில் மோசமடைந்த காற்று மாசுபாடு: 24 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பு 60% அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு​பாடு மோசம் அடைந்​துள்ள நிலை​யில் 6 அண்டை மாநிலங்​களில் பயிர்க்​கழிவு எரிப்பு சம்​பவங்​கள் 24 மணி நேரத்​தில் 60% அதி​கரித்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது.

டெல்லி தேசிய தலைநகரப் பிராந்​தி​யத்​தில் காற்று மாசு​பாடு அதி​கரிப்​ப​தற்​கு, பஞ்​சாப், ஹரி​யானா உள்​ளிட்ட அண்டை மாநிலங்​களில் பயிர்க் கழி​வு​கள் எரிக்​கப்​படு​வதும் ஒரு காரண​மாக உள்​ளது.

இந்​நிலை​யில் இந்​திய வேளாண் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் கிரீம்ஸ் (CREAMS) ஆய்​வகம் சேகரித்த தரவு​களின்​படி, நவம்​பர் 8-ம் தேதி வெறும் 24 மணி நேரத்​தில், 6 மாநிலங்​களில் பயிர்க் கழிவு எரிப்பு சம்​பவங்​கள் 60 சதவீதம் அதி​கரித்​துள்​ள​தாக தெரிய​வந்​துள்​ளது.

செயற்​கைக்​கோள் ரிமோட் சென்​சிங் தரவு​களின்​படி, பஞ்​சாப், ஹரி​யா​னா, உ.பி., டெல்​லி, ராஜஸ்​தான், ம.பி. ஆகிய 6 மாநிலங்​களில் நவம்​பர் 7-ம் தேதி 568-ஆக இருந்த பயிர்க்​கழிவு எரிப்பு சம்​பவங்​கள் மறு​நாள் 911-ஆக அதி​கரித்​துள்​ளது.

நவம்​பர் 8-ம் தேதி, ம.பி.​யில் 353 இடங்​களில் பயிர்க் கழி​வு​கள் எரிக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்து பஞ்​சாபில் 238, ஹரி​யா​னா​வில் 158, ராஜஸ்​தானில் 120, உ.பி.​யில் 42 என இந்த சம்​பவங்​கள் பதி​வாகி​யுள்​ளன. இந்​தப் பரு​வத்​தில் செப்​டம்​பர் 15 முதல் நவம்​பர் 8 வரை மேற்​கண்ட 6 மாநிலங்​களில் மொத்​தம் 8,365 பயிர்க் கழி​வு​கள் எரிப்பு சம்​பவங்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன, இதில் பஞ்​சாபில் அதி​கபட்​ச​மாக 3,622 சம்​பவங்​கள் பதி​வாகி​யுள்​ளன.

பஞ்​சாபில் பயிர்க் கழி​வு​கள் எரிக்​கப்​படு​வதை அங்​குள்ள ஆம் ஆத்மி அரசு கட்​டுப்​படுத்த தவறு​வ​தாக டெல்லி பாஜக அரசு குற்​றம் சாட்​டு​கிறது. பயிர்க் கழி​வு​கள் எரிக்​கப்​படு​வதை தடுக்க சில விவ​சா​யிகளை பிடித்து சிறை​யில் அடைக்​கலாம் என்​றும் ஒரு​முறை உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரை செய்​தது.

டெல்​லி​யில் காற்று மாசு​பாடு அதி​கரிப்​ப​தால் மக்​களுக்கு கண் எரிச்​சல், சுவாசிப்​ப​தில் சிரமம் உள்​ளிட்ட சுகா​தார பாதிப்​பு​கள் ஏற்​படு​கிறது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று காலை காற்று தரக்​குறி​யீடு (ஏகியூஐ) 391 என்ற மிக மோச​மான நிலை​யில் இருந்​தது. காற்று தரக்​குறி​யீடு 350-ஐ கடந்​தால் 3-ம் நிலை கிராப் கட்​டுப்​பாடு​களை அமல்​படுத்த உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில் இது​வரை டெல்லி அரசு இதனை அமல்​படுத்​தாதது குறித்​து கேள்​வி எழுந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x