Published : 07 Nov 2025 09:24 AM
Last Updated : 07 Nov 2025 09:24 AM

பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு பிரேசிலில் தொடக்கம்: அமேசான் காடுகளை அழிவில் இருந்து காக்க நடவடிக்கை

கோப்புப்படம்

பெலெம்: பரு​வநிலை நடவடிக்கை உச்சி மாநாடு பிரேசிலின் பெலெம் நகரில் நேற்று முதல் 2 நாட்​கள் நடை​பெறுகிறது. இதில் அமெரிக்கா கலந்து கொள்​ள​வில்லை என்​றாலும், அமே​சான் காடு​களை அழி​வில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என நம்​பப்​படு​கிறது.

ஐ.நா. பரு​வநிலை மாற்ற மாநாடு (சிஓபி30) பிரேசிலின் அமே​சான் நகர​மான பெலெம் நகரில் வரும் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடை​பெறுகிறது. அதன் ஒரு பகு​தி​யாக உலக தலை​வர்​கள் பங்​கேற்​கும் பரு​வநிலை நடவடிக்கை உச்சி மாநாடு நேற்று தொடங்கி 2 நாட் கள் நடை​பெறுகிறது. இந்த உச்​சி​ மா​நாட்​டில் பல நாடுளைச் சேர்ந்த 53 தலை​வர்​கள், அமைச்​சர்​கள், சர்​வ​தேச அமைப்​பு​களின் தலை​வர்​கள் பங்​கேற்று பரு​வநிலை மாற்ற சவால்​கள் குறித்து ஆலோ​சிக்​கின்​றனர்.

ஐ.நா. பொதுச் செய​லா​ளர் அந்தோனியோ குத்தேரஸ் இதில் பங்​கேற்​கிறார். ஆனால் உலகள​வில் அதிக மாசுகளை உற்​பத்தி செய்​யும், சீனா, அமெரிக்​கா, இந்​தியா மற்​றும் ரஷ்யா தலை​வர்​கள் இந்த மாநாட்​டில் பங்​கேற்​க​வில்​லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற அன்​றே, பாரீஸ் பரு​வநிலை ஒப்​பந்​தத்​தில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​தார். அவர் எந்த மூத்த அதி​காரி​களை​யும் இந்த மாநாட்​டுக்கு அனுப்​ப​மாட்​டார். பரு​வநிலை மாற்ற நடவடிக்​கை​யில் முன்பு அமெரிக்கா முக்​கிய பங்​காற்​றியது. கார்​பன் கழி​வு​களை அதி​க​மாக வெளி​யேற்​றும் சீனாவை அமெரிக்கா கட்​டுப்​படுத்​தி​யது. ஏழை நாடு​களுக்கு நிதி திரட்டி கொடுக்​க​வும் உதவி​யாக இருந்​தது. தற்​போது இதில் அமெரிக்கா பங்​கேற்​காதது, பரு​வநிலை மாற்ற அரசி​யலில் பின்​னடைவை ஏற்​படுத்​தும் என பலர் கவலை தெரி​வித்​துள்​ளனர்.

உலகின் நுரை​யீரல் என அழைக்​கப்​படும் அமே​சான் காடு​கள், புவி வெப்​ப​மாவதற்கு காரண​மான கார்​பன்​-டை ஆக்​சைடு வாயுவை சுவாசித்து ஆக்​ஸிஜனை வெளி​விடு​கிறது. மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த அமே​சான் காடு​கள் கடந்த 50 ஆண்​டு​களில் 17 சதவீதம் அழிந்​து​விட்​டது. காடு​கள் விளைநிலங்​களாக​வும், சுரங்​கங்​களாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளன. அடிக்​கடி ஏற்​படும் காட்​டுத் தீயும் அமே​சான் காடு​களை அழிக்​கிறது.

பிரேசிலில் தற்​போது நடை​பெறும் பரு​வநிலை மாற்ற மாநாட்​டில், அமே​சான் காடு​கள் அழி​வதை தடுக்​க​வும், பரு​வநிலை மாற்​றத்​தின் இதர முக்​கிய​மான இலக்​கு​களை எட்​ட​வும் போதிய நிதியை உரு​வாக்க வேண்​டும் என உலக நாடு​களின் தலை​வர்​களிடம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா வேண்​டு​கோள் விடுக்​க​வுள்​ளார். இந்​தாண்டு சிஓபி30 மாநாடு, இதற்கு முந்​தைய கூட்​டங்​களில் நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​கு​களுக்​கான அமல்​படுத்​து​வதற்​கான நிதி​யை பெற்​று தரு​ம் என நம்பப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x