Published : 22 Oct 2025 06:13 AM
Last Updated : 22 Oct 2025 06:13 AM

சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களில் 226 டன் பட்டாசு கழிவு அகற்றம்

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகையை ஒட்டி சென்னை மாநக​ராட்சி எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​களில் கடந்த 3 நாட்​களில் 225.87 டன் பட்​டாசு கழிவு அகற்​றப்​பட்​டுள்​ள​தாக சென்னை மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது.

நடப்பு ஆண்டு தீபாவளிப் பண்​டிகைக்கு வழக்​கத்தை விட தமிழகத்​தில் அதி​கள​வில் பட்​டாசு விற்​பனை நடந்​துள்​ள​தாக பட்​டாசு விற்​பனை​யாளர்​கள்தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அதை உறு​திப்​படுத்​தும் வகை​யில் கொட்​டும் மழையை​யும் பொருட்​படுத்​தாமல் பட்​டாசு வெடித்து சென்னை மக்​கள் இந்த தீபாவளியை மகிழ்ச்சி ஆரவாரத்​துடன் கொண்​டாடி​யுள்​ளனர்.

அந்த வகை​யில் கடந்த அக்​.19, அக்​.20 மற்​றும் அக்​.21 ஆகிய 3 நாட்​களில் சென்னை மாநக​ராட்சி எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​களில் மட்​டும் 225.87 டன் பட்​டாசு கழி​வு​களை சேகரித்​து, அவற்றை பதப்​படுத்தி அழிப்​ப​தற்​காக கும்​மிடிப்​பூண்டி மையத்​துக்கு அனுப்பி வைத்​துள்​ள​தாக மாநக​ராட்சி தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் அதி​கபட்​ச​மாக வளசரவாக்கம் மண்டலத்தில் 24.08 டன் கழிவும், கோடம்பாக்கம் - 20.45 டன், தேனாம்பேட்டை-19.84 டன், திருவிக நகர்-17.70 டன், தண்​டை​யார்​பேட்டை திருவொற்றியூரில் 17.33 டன், ஆலந்​தூர் மண்​டலத்​தில் 13.09 டன், பெருங்​குடி மண்​டலத்​தில் 12.33 டன், ராயபுரம் மண்​டலத்​தில் 11.95 டன் கழி​வு​களும் மாநகராட்சி பணியாளர்களால் இரவு, பகலாக அகற்​றப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் மிக குறைந்​த​பட்​ச​மாக அண்ணா நகரில் 7.18 டன பட்​டாசு கழிவு சேகரிக்​கப்​பட்டு அகற்​றப்​பட்​டுள்​ள​தாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x