Published : 09 Oct 2025 06:25 AM
Last Updated : 09 Oct 2025 06:25 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தாக்கம் உள்ள ஒரு கி.மீ சுற்றளவுக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது: சிஎம்டிஏ உத்தரவு

சென்னை: ‘பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தின் எல்​லையை ஒட்​டிய, சதுப்பு நில தாக்​கம் உள்ள 1 கி.மீ சுற்​றுப்​பகு​தி​களுக்​குள் எவ்​வித அனு​ம​தி​யும் வழங்​கக் கூடாது’ என்று சிஎம்​டிஏ உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சென்னை மாநகரில் எஞ்சி இருக்​கும் சதுப்பு நில​மாக பள்​ளிக்​கரணை உள்​ளது.

பல்​வேறு ஆக்​கிரமிப்​பு​களால் இதன் பரப்​பளவு தற்​போது 698 எக்​டே​ராக சுருங்​கி​விட்​டது. வனத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இப்​பகு​தி, ஈர நிலப்​பகுதி (ராம்​சார் தலம்) என அறிவிக்​கப்​பட்​டு, பாது​காக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், இந்த சதுப்பு நிலத்​தில் பெரும்​பாக்​கம் பகு​தி​யில் சாலை அமைக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக, வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் தாமாக முன்​வந்து விசா​ரித்த தென்​மண்டல பசுமை தீர்ப்​பா​யம், சதுப்பு நிலம் அடங்​கிய ராம்​சார் பகுதி மற்​றும் அதைச் சுற்​றிய ஒரு கி.மீ சுற்​றளவுக்கு அதாவது ராம்​சார் தாக்​கப்​பகு​தி​யில் எவ்​வித அனு​ம​தி​யும் வழங்​கக்​கூ​டாது என்று கடந்த செப்​.24-ம் தேதி உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், தற்​போது சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மம் ஒரு உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது.

அதன்​படி, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலப்​பகுதி மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள ஒரு கி.மீ அதாவது அரசங்​கழனி, பெரும்​பாக்​கம், ஜல்​லடி​யான் பேட்​டை, பள்​ளிக்​கரணை, மடிப்​பாக்​கம், புழு​தி​வாக்​கம், வேளச்​சேரி, தரமணி, சீவரம், ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம், காரப்​பாக்​கம், ஈஞ்​சம்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர், செம்​மஞ்​சேரிக்கு உட்​பட்ட சதுப்​புநில தாக்​கப்​பகு​தி​களில் எவ்​வித அனு​ம​தி​யும் வழங்​கக்​கூ​டாது என்று சிஎம்​டிஏ உறுப்பினர் செயலர் உத்​தர​விட்​டுள்ளார்.

இந்த உத்​தரவு தலைமை பிளானர் வாயி​லாக அனைத்து உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்​ளது. மேலும் உத்​தர​வில் மேம்​பாட்​டுப் பணி​களுக்​கான அனு​ம​தி, ஒப்​புதல் கூடாது என்று மட்​டுமே குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. கட்​டிட அனு​ம​தி​யா, மனைப்​பிரிவு மேம்​பாட்​டுக்​கான அனு​ம​தியா என்​பது தெளிவுபடுத்​தப்​பட​வில்​லை.

மக்களுக்கு பாதிப்பில்லாமல்... இந்த உத்​தரவை சென்னை மாநக​ராட்சி மற்​றும் ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​கள் செயல்​படுத்​தும் பட்​சத்​தில், சதுப்பு நிலப்​பகு​தி​யைச் சுற்​றி​யுள்ள ஒரு கி.மீ சுற்​றளவுக்​குள் எந்த மேம்​பாட்​டுப் பணி​களை​யும் மேற்​கொள்ள முடி​யாது. இதனால், லட்​சக்​கணக்​கான மக்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று கூறப்​படு​கிறது. எனவே, மக்​கள் பாதிக்​கப்​ப​டாத வகை​யில் அரசு முடி​வெடுக்க வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x