Published : 20 Sep 2025 05:56 AM
Last Updated : 20 Sep 2025 05:56 AM

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்

சென்னை: சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்கு பரு​வநிலை மாற்​றம் பெரும் சவாலாக இருப்​ப​தாக தமிழ்​நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி தெரி​வித்​துள்​ளார். அறி​வியல் மற்​றும் தொழிற்​சாலை ஆராய்ச்சி கவுன்​சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்​றும் தேசிய சுற்​றுச்​சூழல் பொறி​யியல் ஆராய்ச்சி நிறு​வனம் (NEERI) சார்​பில் "தென்​னிந்​தி​யா​வில் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் தற்​போதுள்ள பிரச்​சினை​கள் மற்​றும் சவால்​கள்" என்ற தலைப்​பில் கருத்​தரங்​கம் சென்னை தரமணி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழ் நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி பேசி​ய​தாவது: வாகன உதிரி​பாக உற்பத்​தி, ஜவுளி, தோல், சர்க்​கரை மற்​றும் அதன் உப பொருட்​கள் உற்பத்​தி​யில் தமிழகம் முன்​னிலை​யில் உள்​ளது. நாடு முழு​வதும் உள்ள தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் பெண்​களில் 40% பேர் தமிழகத்​தில் உள்​ளனர்.

தமிழகத்​தில் 31 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான தொழிற்​சாலைகள் இயங்கி வரு​கின்​றன. தமிழகத்​தில் 17 முக்​கிய ஆற்​றுப்​படு​கைகள் உள்​ளன. அவற்​றில் காவிரி, வைகை, தாமிரபரணி மற்​றும் பாலாறு நமது விவ​சா​யம் மற்​றும் குடிநீர் விநி​யோகத்​துக்கு உயிர்​நாடி​யாக உள்​ளது. தமிழக கடற்​கரை 1076 கிமீ நீளம் கொண்​டது.

இதில் ஏராளான கழி​முகங்​கள், பவளப்​பாறை​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​தி​யா​வின் முதல் உயிர்க்​கோள காப்​பக​மான மன்​னார் வளை​கு​டா​வும் இங்கு தான் அமைந்​துள்​ளது. இதில் 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தாவர இனங்​களும், விலங்​கினங்​களும், கடல் பசு போன்ற அழி​வின் விளிம்​பில் உள்ள விலங்​கினங்​களும் வாழ்​கின்​றன. இந்​தி​யா​விலேயே அதிக எண்​ணிக்​கையி​லான (20 இடங்​கள்) ராம்​சார் ஈர நிலங்​களும் தமிழகத்​தில் தான் உள்​ளன.

பெரும் சவால்: இவற்​றின் பாது​காப்​புக்கு பரு​வநிலை மாற்​றம் பெரும் சவாலாக உள்​ளது. இருப்​பினும் பரு​வநிலை மாற்​றத்​தின் தாக்​கத்தை குறைக்க தமிழக அரசு ஒரு​முறை பயன்​படுத்தி தூக்கி எறிப்​படும் பிளாஸ்​டிக்கை ஒழிக்க, `மீண்​டும் மஞ்​சப்​பை' திட்டத்தை மக்​கள் இயக்​க​மாக மாற்றி வரு​கிறது. மேலும் பசுமை தமிழ்​நாடு இயக்​கம், ஈரநில இயக்​கம், கடலோர சீரமைப்பு இயக்கம், இவற்றை செயல்​படுத்த `தமிழ்​நாடு பசுமை பரு​வநிலை நிறு​வனம்' ஒன்​றை​யும் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்​சி​யில் சிஎஸ்​ஐஆர் இயக்​குநர் எஸ்​.வெங்கட மோகன், கட்​டமைப்பு பொறி​யியல் ஆராய்ச்சி நிறுவன (SERC) இயக்​குநர் என்.ஆனந்​தவள்​ளி, முன்​னாள் சிஎஸ்​ஆர் இயக்​குநர் சுகு​மார் டிவோட்​டா, கேரளா மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் எஸ்​.கலா, புதுச்​சேரி மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய உறுப்​பினர் செயலர் என்​.ரமேஷ், எல் அன்டு டி நிறுவன துணைத்​ தலை​வர்​ கே.ரஜீவன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x