Published : 12 Sep 2025 06:14 AM
Last Updated : 12 Sep 2025 06:14 AM
புதுடெல்லி: இந்திய வர்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) சார்பில் 17-வது நிலக்கரி உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர் (எரிசக்தி) ராஜ்நாத் ராம் பேசியதாவது:
கார்பன் டை ஆக்ஸைடை சேமித்து பயன்படுத்தும் திட்டத்தை (சிசியுஎஸ்) அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சில தொழில்நுட்பங்களுக்கு 100% அரசு நிதியுதவி வழங்கப்படும். மொத்த ஊக்கத் தொகை 50% முதல் 100% வரை இருக்கும். இந்த ஊக்கத் தொகை, தொழில் துறையினர் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பங்களை எளிதில் கடைபிடிக்கவும் அவற்றை நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி அமைப்புகளுடன் இணைக்கவும் உதவும் என்றார்.
சிசியுஎஸ் தொழில்நுட்பம் என்பது தொழிற்சாலைகள் மற்றும் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்துக்குள் செல்வதற்கு முன் அவற்றை சேமித்து நிலக்கரிக்கு பதிலாக பயன்படுத்தும் செயல்முறை ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT