Published : 12 Sep 2025 06:14 AM
Last Updated : 12 Sep 2025 06:14 AM

கார்பன் சேமிப்பு திட்டம் விரைவில் அறிமுகம்: நிதி ஆயோக் ஆலோசகர் தகவல்

புதுடெல்லி: இந்​திய வர்த்தக கூட்​டமைப்பு (ஐசிசி) சார்​பில் 17-வது நிலக்​கரி உச்சி மாநாடு டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நிதி ஆயோக் அமைப்​பின் ஆலோ​சகர் (எரிசக்​தி) ராஜ்​நாத் ராம் பேசி​ய​தாவது:

கார்​பன் டை ஆக்​ஸைடை சேமித்து பயன்​படுத்​தும் திட்​டத்தை (சிசி​யுஎஸ்) அரசு விரை​வில் அறி​முகப்​படுத்த உள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் சில தொழில்​நுட்​பங்​களுக்கு 100% அரசு நிதி​யுதவி வழங்​கப்​படும். மொத்த ஊக்​கத் தொகை 50% முதல் 100% வரை இருக்​கும். இந்த ஊக்​கத் தொகை, தொழில் துறை​யினர் கார்​பன் சேமிப்பு தொழில்​நுட்​பங்​களை எளி​தில் கடைபிடிக்​க​வும் அவற்றை நிலக்​கரி அடிப்​படையி​லான எரிசக்தி அமைப்​பு​களு​டன் இணைக்​க​வும் உதவும் என்​றார்.

சிசி​யுஎஸ் தொழில்​நுட்​பம் என்​பது தொழிற்​சாலைகள் மற்​றும் மின்​நிலை​யங்​களி​லிருந்து வெளி​யேறும் கார்​பன் டை ஆக்​ஸைடு வளிமண்​டலத்​துக்​குள் செல்​வதற்கு முன் அவற்​றை சேமித்து நிலக்​கரிக்கு பதிலாக பயன்​படுத்​தும்​ செயல்​முறை ஆகும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x