Published : 03 Sep 2025 12:59 AM
Last Updated : 03 Sep 2025 12:59 AM

தென்பெண்ணை ஆற்றில் விஷத்தன்மையுள்ள கழிவு நீர் திறப்பதை தடுக்க உடனடி நடவடிக்கைகள் என்ன? - கர்நாடக அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: பெங்​களூரு மாநக​ராட்சி மற்​றும் தொழிற்​சாலைகளில் இருந்து நுரை​யுடன், விஷத்​தன்​மை​யுடைய ரசாயன கழி​வு​கள் தென்​பெண்ணை ஆற்​றில் திறந்து விடப்​படு​வ​தாக செய்திகள் வெளி​யானது.

இந்த விவ​காரத்தை பசுமைத் தீர்ப்​பா​யம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்​பாய நீதித்துறை உறுப்​பினர் புஷ்பா சத்​தி​யநா​ராயணா, நிபுணத்துவ உறுப்​பினர் சத்​ய கோ​பால் முன் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவின் அடிப்​படை​யில் கர்​நாடக தலை​மைச் செய​லா​ளர் தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

மாசு ஏற்​படுத்​தக்​கூடிய தொழிற்​சாலைகளுக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளன. தென்​பெண்ணை ஆற்​றின் நீர்​பிடிப்பு பகு​தி​களில் 12 கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. 4 கழிவு நீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்​கான பணி​கள் வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் முடிக்​கப்​படும். மீத​முள்ள சுத்​தி​கரிப்பு நிலையம் அமைக்​கும் பணி​கள் வரும் 2027-ம் ஆண்டு டிசம்​பர் மாதத்​துக்​குள் முடிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த அறிக்​கையை ஆய்வு செய்த தீர்ப்​பா​யம், தென்​பெண்ணை ஆற்​றில் விஷத்​தன்​மை​யுள்ள கழிவு நீர் திறந்து விடப்​படு​வதைத் தடுக்க எடுக்க உள்ள உடனடி நடவடிக்​கைகள் குறித்த அறிக்​கையை தாக்​கல் செய்ய கர்​நாடக தலை​மைச் செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டு, விசா​ரணையை நவ.14-ம் தேதிக்கு தள்ளிவைத்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x