Published : 30 Aug 2025 05:54 AM
Last Updated : 30 Aug 2025 05:54 AM

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 8.66 மி. கன லிட்டர் தண்ணீரை தேக்கக்கூடிய 4 குளங்கள்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள 4 குளங்​களின் கொள்ளளவை 2 மடங்​காக அதி​கரிக்​கும் வகை​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பணி​களை சுகாதாரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணை​யர் (பணி​கள்) வி.சிவகிருஷ்ண​மூர்த்​தி உள்ளிட்டோர் உடனிருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சைதாப்​பேட்​டை, கிண்டி பகு​தி​களில் மழைநீ​ரால் பல்​வேறு பகு​தி​கள் பாதிக்​கப்​படு​கின்​றன.

இதனைக் கருத்​தில் கொண்டு கடந்த ஆண்டு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்​படுத்தி 4.77 மில்​லியன் கனலிட்டர் மழைநீரை தேக்​கக்​கூடிய வகை​யில் 27,647 சதுர மீட்​டர் பரப்​பள​வில் புதிய குளங்​கள் இங்கே உரு​வாக்​கப்​பட்டன.

இந்​நிலை​யில், பெரிய அளவில் மழை பெய்​தா​லும் அதனைத் தாங்​கும் அளவுக்​கான சக்தி கொண்ட பெரிய குளங்​கள் தோண்​டப் பட்​டு, 49,772 சதுர மீட்​டர் பரப்​பள​வில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டிருக்​கின்​றன. 8.66 மில்​லியன் கன லிட்​டர் மழைநீரை தேக்கி வைப்​ப​தற்​கான குளங்​கள் இப்​போது பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. இதன்​மூலம் தென்​சென்னை குடி​யிருப்​புப் பகு​தி​களில் மழைநீர் புகாத வண்​ணம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் 3,081 கி.மீ. தூரத்​துக்​கான மழைநீர் கால்​வாய்​கள் தூர்​வாரப்​பட்டு பணி​கள் முடிவடைந்​துள்​ளன. சென்னை மாநக​ராட்​சி, நீர்​வளத் துறை, பொதுப்​பணித் துறை, நெடுஞ்​சாலைத் துறை போன்ற பல்​வேறு துறை​களை ஒருங்​கிணைத்து சென்​னை​யில் கடந்த காலங்​களில் எங்​கேயெல்​லாம் மழைநீர் தேக்​கம் இருந்​ததோ, அந்த பகு​தி​களில் முற்​றி​லு​மாக மழைநீர் தேங்​காமல் இருக்க நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 4.5 ஆண்​டு​களில் மட்​டும் சுமார் 1,000 கி.மீ. நீளத்​துக்கு புதிய மழைநீர் வடி​கால்​வாய்​கள் கட்​டும் பணி​கள் முடிவடைந்துள்ளன. இன்​ன​மும் 600 கி.மீ. தூரத்​துக்கு மழைநீர் கால்​வாய்​களைக் கட்​டும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

ஒட்டுமொத்த பணி​களும் வடகிழக்கு பரு​வ​மழைக்கு முன்​பாகவே முடிக்​கப்​படும். 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்​தால் கூட அதைத் தாங்​கும் வகை​யில் நடவடிக்​கைகளை சென்னை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உடல்​நிலை குறித்த கேள்விக்​கு, “முதல்​வர் நலமுடன் இருக்​கிறார். காலை​யில் கூட நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார். முதல்​வரின் வெளி​நாடு பயணத்​தில் எந்​த மாற்​ற​மும்​ இல்​லை” என்​று அமைச்​சர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x