Published : 20 Aug 2025 06:20 AM
Last Updated : 20 Aug 2025 06:20 AM

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் செய்ய வேண்டியவை, கூடாதவை: சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி கொண்​டாட்​டத்​தின் போது சுற்​றுச்​சூழல் அழகை​யும், தூய்​மை​யை​யும் பாது​காக்கபொது​மக்​கள் செய்ய வேண்​டிய​வை, செய்​யக் கூடாதவை குறித்து மாவட்ட ஆட்​சி​யர் அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை விநாயகர் சதுர்த்​திக்கு சுற்​றுச்​சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்​படுத்த வேண்​டும். சிலைகளுக்கு நீர் சார்ந்த, இயற்​கை​யாக மக்​கக்​கூடிய, நச்​சுத்​தன்​மையற்ற இயற்கை சாயங்​களையே பூச வேண்​டும். அறிவிக்​கப்​பட்ட இடங்​களில் மட்​டுமே சிலைகளைக் கரைக்க வேண்​டும்.

சுற்​றுசூழலுக்கு உகந்த பூக்​கள், இலைகள், துணி​களை மட்​டுமே பூஜைப் பொருட்​களாக உபயோகப்​படுத்த வேண்​டும். துவைத்து மீண்​டும் உபயோகிக்​கக் கூடிய துணி​களை​யும், எல்​இடி பல்​பு​களை​யும் அலங்​காரத்​துக்கு பயன்​படுத்​தலாம். பிர​சாத விநி​யோகத்​துக்கு மக்​கும் அல்​லது மீண்​டும் பயன்​படுத்​தக்​கூடிய தட்​டு​கள் மற்​றும் கண்​ணாடி கோப்​பைகளையே உபயோகிக்க வேண்​டும்.

விழா முடிந்​தவுடன் பொறுப்​புடன் குப்​பையை பிரித்து அப்​புறப்​படுத்த வேண்​டும். பிளாஸ்டிக், ரசாயனம் வேண்டாம் விநாயகர் சதுர்த்​திக்கு பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் வகை சிலைகளைப் பயன்​படுத்​தக் கூடாது.

சிலைகளை அலங்​கரிக்க சுற்​றுச்​சூழலுக்கு தீங்கு விளைவிக்​கக் ​கூடிய பிளாஸ்​டிக், தெர்​மாகோல், ஃபிலமென்ட் பல்​பு​கள், ரசாயனப் பொருட்​கள், எண்​ணெய் வண்​ணப் பூச்​சுகள், சாயங்​கள் ஆகிய​வற்றை உபயோகப்​படுத்​தக் கூடாது. அதே​போல் பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மாகோலால் ஆன பொருட்​களை பூஜைக்கு பயன்​படுத்​தக் கூடாது.

பண்​டிகை​யின்​போது ஒரு​முறை பயன்​படுத்தி தூக்​கியெறியக் கூடிய பிளாஸ்​டிக் தட்​டு​கள், கோப்​பைகள், கரண்​டிகள் மற்​றும் உறிஞ்சு குழாய்​களை பயன்​படுத்​து​வதைத் தவிர்க்க வேண்​டும். குறிப்​பாக அனு​மதி இல்​லாத நீர்​நிலைகளில் சிலைகளை கரைக்​கக்கூடாது. குப்பை மற்​றும் கழி​வு​களை பொறுப்​பற்று கொட்​டக் கூடாது.

சுற்​றுச்​சூழலைப் பாது​காப்​ப​தில் தமிழகத்​துக்​கென நீண்ட கால பாரம்​பரி​யம் உள்​ளது. எனவே இந்த வழி​முறை​களைப் பின்​பற்​றி, விநாயகர் சதுர்த்தி கொண்​டாட்​டத்​தில், நமது சுற்​றுச்​சூழலின் அழகை​யும், தூய்​மை​யை​யும் பாது​காப்​ப​தற்​கான நமது உறு​திப்​பாட்டை நிரூபிக்க பொது​மக்​கள் ஒத்​துழைப்பு வழங்​கு​மாறு சென்னை மாவட்ட ஆட்​சி​யர்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x