Published : 13 Aug 2025 02:00 AM
Last Updated : 13 Aug 2025 02:00 AM

யானைகள் பாதுகாப்பாக இருக்க உறுதி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோப்புப்படம்

சென்னை: யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க உலக யானைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக யானைகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலக யானைகள் நாளில், தமிழகத்தின் இயற்கை மரபையும், வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கு குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

கோவையில் மத்திய வனத்துறை அமைச்​சர் பூபேந்​தர் யாதவ் யானை​கள் நாள் கொண்​டாட்​டங்​களில் பங்​கேற்​று, மதுக்​கரை​யில் நாம் அமைத்​துள்ள செயற்கை நுண்​ணறிவு எச்​சரிக்கை அமைப்பை பார்​வை​யிட உள்​ளார். இந்த அமைப்​பின் மூலம் 2,800 முறை யானை​கள் ரயில் தண்​டவாளத்​தைப் பாது​காப்​பாகக் கடந்து சென்​றுள்​ளன. இதனால் 2024 பிப்​ர​வரி​யில் இருந்து ஒரு யானைகூட ரயில் மோதி இறக்​காமல் காப்​பாற்​றி​யுள்​ளோம்.

அண்​மை​யில், தெப்​பக்​காட்​டில் யானை பாகன்​களுக்​கான கிராமத்​தை​யும் அரசு சார்​பில் தொடங்கி வைத்​தேன். யானை பாகன்​களின் நலனிலும் அக்​கறை கொண்​டுள்​ளோம். இனிவரும் காலங்​களி​லும் யானை​கள் பாது​காப்​பாக​வும், சுதந்​திர​மாக​வும் இருக்க இந்​நாளில் உறு​தி​யேற்​போம்​. இவ்வாறு முதல்​வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x