Published : 28 Jul 2025 05:57 AM
Last Updated : 28 Jul 2025 05:57 AM

கொடுங்கையூரில் 15 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றம்: மீட்கப்பட்ட 2 ஏக்கரில் மரக்கன்று நடும் மாநகராட்சி

சென்னை: ​கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் கடந்த 8 மாதங்​களில் 15 லட்​சம் டன் பழைய கழி​வு​கள் அகற்​றப்​பட்டுள்​ளன. அதன் மூலம் மீட்​கப்​பட்ட 2 ஏக்​கர் நிலத்​தில் மரக்​கன்​றுகளை நட மாநக​ராட்சி திட்​ட​மிட்​டுள்​ளது.

வட சென்னை மற்​றும் மத்​திய சென்னை பகு​தி​களில் சேகர​மாகும் குப்பை கடந்த 40 ஆண்​டு​களாக கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் கொட்​டப்​பட்டு வரு​கிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்​டர் தொலை​விலேயே குடி​யிருப்​புப் பகுதிகள் உள்​ளன.

எந்த விதி மற்​றும் அறி​வியல் முறையை​யும் பின்​பற்​றாமல், மக்​கும் குப்​பை, மக்​காத குப்பை என வகைப்​படுத்​தாமல் மாநக​ராட்சி நிர்​வாகம் அங்கு குப்​பையை கொட்டி வந்​த​தால், குப்பை மலை​போல் குவிந்து கிடக்​கிறது. இனிவரும் காலங்​களில் குப்பை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. அப்​பகு​தி​யைச் சுற்றி காற்று மாசு, நிலத்​தடி நீர் மாசுபடு​தல் என பல்​வேறு சுற்றுச்​சூழல் பாதிப்​பும் ஏற்​பட்டு வரு​கின்​றது.

சுமார் 343 ஏக்​கர் பரப்​பள​வில் பரந்து விரிந்​துள்ள கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் சுமார் 252 ஏக்​கர் நிலப்​பரப்​பில் உள்ள சுமார் 66.52 லட்​சம் டன் பழைய திடக்​கழி​வு​களை ரூ.648 கோடி செல​வில் பயோ மைனிங் முறை​யில் அகழ்ந்​தெடுத்​து, அந்த நிலத்தை மீட்​டெடுக்​கும் பணி​களை கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம் மாநக​ராட்சி தொடங்​கியது.

கடந்த பிப்​ர​வரி மாத நில​வரப்​படி 3 லட்​சம் டன் வரை அகழ்ந்​தெடுக்​கப்​பட்​டிருந்​தது. சில ஆரம்​பக்​கட்ட நடை​முறை சிக்​கல்​களை சந்​திக்க வேண்டி இருந்​தது. அதன் பின்​னர் மார்ச் மாதத்​திலிருந்து நாளொன்​றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கையாளப்​பட்டு வந்தது.

இப்​பணி​யின் தற்​போதைய நில​வரம் குறித்து மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறும்​போது, “கொடுங்​கையூரில் தற்​போது 4 பிரிவு​களாக பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த 8 மாதங்​களில் மொத்​தம் 15 லட்​சம் டன் பழைய கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. அவற்றி​லிருந்த மக்​காத குப்பை எரிபொருளாக பயன்​படுத்த அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இந்த நடவடிக்​கை​யின் மூலம் தற்​போது 2 ஏக்​கர் நிலத்தை மீட்​டு, மாநக​ராட்​சி​யிடம் ஒப்​பந்​த​தா​ரர்​கள் ஒப்​படைக்க உள்​ளனர். அந்த இடத்​தில் மரக்​கன்​றுகளை நட்​டு, மாநகரின் பசுமை பரப்பை அதி​கரிக்க மாநக​ராட்சி நடவடிக்​கை எடுத்​து வரு​கிறது” என்றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x