Published : 20 Jun 2025 02:23 PM
Last Updated : 20 Jun 2025 02:23 PM

சென்னை - பக்கிங்ஹாம் கால்வாயில் டெங்கு பரப்பும் ஏடீஸ் கொசுக்கள்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வட சென்னை கொருக்குப்பேட்டை, நேதாஜி நகர் அருகில், பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுகிறது. | படம்: ச.கார்த்திகேயன் |

சென்னை மாநகரில் பெரு​மழை காலங்​களில் வெள்​ளநீர் வழிந்​தோடும் இயற்கை வடி​காலாக கூவம், அடை​யாறு, பக்​கிங்​ஹாம் கால்​வாய் ஆகியவை உள்​ளன. ஆனால் மழைக்​காலம் தவிர்த்​து, இந்த 3 நீர்​வழித்​தடங்​களி​லும் ஆண்டு முழு​வதும் கழி​வுநீர் தான் ஓடிக்​கொண்​டிருக்​கிறது. அடை​யாறு சீரமைப்பு திட்​டம், கூவம் சீரமைப்பு திட்​டங்​களுக்கு பல 100 கோடி ரூபாய்​களை அரசு செல​விட்​ட​தால், அவற்​றில் ஓடும் கழி​வுநீரின் அளவு குறைந்​துள்​ளது.

ஆனால் சென்னை மாநகரில் சுமார் 55 கிமீ நீளத்​துக்கு பயணிக்​கும் பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத​தால், மற்ற 2 நீர் வழித்​தடங்​களை விட மோச​மாக கழி​வுநீர் தேங்கி மாசுபட்​டுள்​ளது. வட சென்​னை​யில் சென்னை குடிநீர் வாரியமே, வீடு​களில் இருந்து வெளி​யேறும் சுத்​தி​கரிக்​கப்​ப​டாத கழி​வுநீரை தின​மும் விட்டு மாசுபடுத்தி வரு​கிறது. இதனால் இதிலிருந்து உரு​வாகும் கியூலெக்​ஸ், அனாபிலஸ் போன்ற கொசுக்​களால் கால்​வாயை ஒட்​டி​யுள்ள மக்​கள் ஆண்டு முழு​வதும் கடும் அவதிக்​குள்​ளாகின்​றனர்.

மாநக​ராட்சி நிர்​வாகம் கொசு ஒழிப்பு பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரை ஈடு​படுத்​தி​யுள்​ளது. கொசு ஒழிப்பு மருந்​துக்​காக கோடிகளில் செல​விட்டு வரு​கிறது. இருப்​பினும் கொசுவை ஒழிக்​க​வில்​லை. கோடை​யில் வெப்​பம் அதி​கரிக்​கும்​போதும், அக்டோபர்- டிசம்​பர் மாதங்​களில் அதிக மழை பெய்து, தேங்​கி​யுள்ள நீரும், அதில் உள்ள கொசு முட்​டை, புழுக்​களும் அடித்​துச் செல்​லப்​படு​வ​தா​லுமே கொசுக்​கள் ஒழிகிறது. மாநக​ராட்​சி​யின் கொசு ஒழிப்பு நடவடிக்கை வீண் செலவு என்​பது விவரம் அறிந்​தவர்​களின் கருத்​தாக உள்​ளது.

இதற்​கிடை​யில் சென்னை மாநக​ராட்​சி​யின், அடை​யாறு மண்டல அலு​வலர், “பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் தேவையற்ற கழி​வு​கள், ஆகா​யத்​தாமரை செடிகள், கோரை புற்​கள் முளைத்து இருப்​ப​தா​லும், நீர் வழிந்​தோட முடி​யாமல் தேங்​கி, கொசு உற்​பத்​திக்கு காரண​மாக உள்​ளது. அதனால் மேற்​கூறிய​வற்றை அகற்​றி, நீர் வழிந்​தோட உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று நீர்வள ஆதா​ரத்​துறைக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் சென்​னையை சேர்ந்த சமூக ஆர்​வலர் உன்​னிகிருஷ்ணன், மாநக​ராட்​சிக்​கும், நீர்வள ஆதா​ரத்​துறைக்​கும் முறைப்​படி தகவல் தெரி​வித்​து​விட்​டு, பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் தேங்​கி​யுள்ள நீர் மாதிரி​களை என்​ஏபிஎல்​(NABL), என்​ஏபிஇடி (NABET) அங்​கீ​காரம் பெற்ற ஆய்​வகத்​தில் கடந்த மாதம் ஆய்வு செய்​தார்.

இதன் முடிவு​கள் அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில் இருந்​தது. அதில் அதிக அளவில் மனித கழி​வு​கள் நிறைந்​திருப்​பதும் உறுதி செய்​யப்​பட்​டது. உடனடி​யாக அவர், பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் கழி​வுநீர் தேங்​கு​வதை தடுக்​க​வும், கொசு உற்​பத்​தியை தடுக்​க​வும் வலி​யுறுத்​தி, மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்​தி, மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், நீர்வள ஆதா​ரத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன் ஆகியோரிடம் புகார் மனு அளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக உன்​னிகிருஷ்ணன், இந்து தமிழ் திசை செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: பெருநகரம் மற்​றும் மாநகர பகு​தி​களில் சுத்​தி​கரிக்​கப்​பட்ட கழி​வுநீரை நீர்​நிலைகளில் விடும்​போது, அதன் தரம் எப்​படி இருக்க வேண்​டும் என, தேசிய பசுமை தீர்ப்​பா​யம் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்​பளித்​துள்​ளது. அதில் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை விட, பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் உள்ள நீரின் மாசு 10 மடங்​குக்கு மேல் அதி​க​மாக உள்​ளது.

இந்த ஆய்வு முடி​வில், ஒரு லிட்​டர் நீரில் டிஎஸ்​எஸ் (Total Suspended Solids) அளவு 10 மி.கி-க்கு பதிலாக 1806 மி.கி (180 மடங்​கு), சிஓடி (Chemical Oxygen Demand) 50 மி.கி-க்கு பதிலாக 516 மி.கி (10.32 மடங்​கு), பிஓடி (Bio Chemical OXygen Demend) 10 மி.கி-க்கு பதிலாக 123 மி.கி (12.3 மடங்​கு) உள்​ளது. ஃபீகல் கோலி​போம் (Fecal Coliform) 100 மி.லி. நீரில், 230 எம்​பிஎன்​-க்கு பதிலாக 1600 எம்​பிஎன் (7 மடங்​கு) உள்​ளது.

இந்த முடிவு​களை பார்க்​கும்​போது, இந்த நீரில் ஆக்​சிஜனின் அளவு குறைந்​து, இந்த நீர்​நிலைகளில் மீன், தவளை, உள்​ளிட்ட உயி​ரினங்​கள் வாழ​முடி​யாத நிலை​யும், இயற்கை உணவு சங்​கிலி உடைபடும் நிலை​யும் ஏற்​படும். மேலும் ஃபீகல் கோலி​போம் 1600 எம்​பிஎன் இருப்​பது, கழி​வுநீரில் மனித கழி​வு​கள் நிறைந்​திருப்​பதை காட்​டு​கிறது. இதன் மூலம் மாநக​ராட்​சி​யும், நீர்வள ஆதா​ரத்​துறை​யும், இந்த துறை​களை கண்​காணிக்க வேண்​டிய மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய​மும் தனது கடமையி​லிருந்து தவறி​யுள்​ளன.

இந்த கழி​வுநீரில் தான் கியூலெக்​ஸ், அனாபிளஸ் போன்ற மலேரி​யா, யானைக்​கால் நோய்​களை பரப்​பும் கொசுக்​கள் உற்​பத்​தி​யாகின்​றன. மேலும் உயிர்​கொல்லி மற்​றும் தொற்​று​நோய் சட்​டம்​-1897ன்​படி அறிவிக்கை செய்​யப்​பட்ட நோயான டெங்கு மற்​றும் சிக்​குன் குன்​யா, ஜிகா போன்ற நோய்​களை பரப்​பும் ஏடீஸ் கொசுக்​களும், கழி​வுநீரில் உற்​பத்​தி​யா​வதை கொல்​கத்தா மாநக​ராட்சி தலைமை பூச்​சி​யியல் வல்​லுநர் உறுதி செய்​துள்​ளார். பல்​வேறு ஆய்​வறிக்​கைகளும் அதை உறுதி செய்​துள்​ளன.

அதனால், சுற்​றுச்​சூழல் பாது​காப்பு சட்​டம் - 1986, பிரிவு-9, துணை பிரிவு 1-ன் கீழ் சுற்​றுச்​சூழல் பாதிப்பை தடுக்க வலி​யுறுத்தி மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர், மாநக​ராட்சி ஆணை​யர், நீர்வள ஆதா​ரத்​துறை செயலர் ஆகியோரிடம் மனு அளித்​திருக்​கிறேன். இந்த சட்​டப்​பிரி​வின் கீழ் புகார் கொடுத்​தால் உடனடி​யாக நடவடிக்கை எடுத்​து, சுற்​றுச்​சூழல் பா​திப்பை சரி செய்ய வேண்​டும்.

இவ்​வாறு அவர் கூறி​னார். இது தொடர்​பாக நீர்வள ஆதா​ரத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தனிடம் கேட்​ட​போது, “நீர் வழிந்​தோட ஏது​வாக பக்​கிங்​ஹாம்​ கால்​வா​யில்​ சுமார்​ ரூ.4.90 கோடி​யில்​ 35 கி.மீ. நீளத்​துக்​கு தூர்​ வாரும்​ பணி விரை​வில்​ தொடங்​கப்​படும்​” என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x