Published : 14 Jun 2025 04:07 PM
Last Updated : 14 Jun 2025 04:07 PM

குப்பைமேடாக மாறி வரும் வண்டலூர் காப்பு காடுகள்: பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள்

வண்​டலூர் காப்பு காடு​களை ஒட்​டிய பகுதிகளில் கொட்​டப்​படும் பிளாஸ்​டிக் கழிவுகளை உட்​கொள்ளும் மான்கள்.

வண்​டலூர் காப்பு காடு​களை ஒட்​டிய பகு​தி​களில் தொடர்ந்து கொட்​டப்​படும் பிளாஸ்​டிக் கழி​வு​களை உட்​கொள்​ளும் மான் உள்ளிட்ட வன உயி​ரினங்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்து வரு​கின்​றன. வனப்​பகு​தி​யில் அதி​கரித்து வரும் பிளாஸ்​டிக் கழி​வு​கள், மது​பாட்​டில்​கள் மற்​றும் குப்​பைகளால் வனத்​தின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகி வரு​கிறது.

இதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, வன உயி​ரின ஆர்​வலர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர் செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் பகு​தி​யில் காப்பு காடு பகு​தி​கள் உள்​ளன. இங்கு மான், காட்​டுப்​பன்​றி, முயல், முள்​ளம்​பன்​றி, மயில், நரி, ஓநாய், உடும்பு உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான உயி​ரினங்​கள் வாழ்​கின்​றன.

இந்த காப்பு காடு​களை சுற்​றி​யுள்ள வண்​டலூர், நெடுங்​குன்​றம், ஊரப்​பாக்​கம், ஊனை​மாஞ்​சேரி, காரணை புதுச்​சேரி போன்ற கிராம ஊராட்​சிகள் தங்​கள் பகு​தி​யில் சேகரிக்​கப்​படும் குப்பை கழி​வு​களை வனப்​பகு​தியை ஒட்​டி​யுள்ள பகு​தி​யில் கொட்​டு​கின்​றனர். இரவு நேரங்​களில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வரும் மான்​கள், குப்​பை​யில் கிடக்​கும் பொருட்​களை உண்டு மரணம் அடைகின்​றன. இறந்து போன பல மான்​களின் எச்​சத்​தில் பிளாஸ்​டிக் கழி​வு​கள் கலந்திருப்​பது மருத்​துவ பரிசோதனை​யில் தெரிய வரு​கிறது.

குறிப்​பாக, சுமார், 20-க்​கும் மேற்​பட்ட மான்​கள் கடந்த சில மாதங்​களில் உயி​ரிழந்​துள்​ளன. வண்​டலூர் காப்பு காடு​களின் எல்​லைகளை ஒட்​டிய பகு​தி​கள் குப்பை கழி​வு​கள் கொட்​டும் இடமாக மாறி​யுள்​ளன. வனப்​பகு​தி​கள் பல இடங்​களில் சமூக விரோ​தி​கள் போட்டு செல்​லும் மது பாட்​டில்​கள், பிளாஸ்​டிக் டம்​ளர்​கள் நிறைந்த குப்பை மேடாக மாறி வரு​கின்​றன. எனவே, வன விலங்​கு​கள் நடமாடும் பகு​தி​களில் கொட்​டி​யுள்ள குப்பை குவியல்​களை முற்​றி​லு​மாக அகற்​றி, இனி குப்பை கொட்​டா​மல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

இதுகுறித்து வன உயி​ரின ஆர்​வலர்​கள் கூறும்​போது, வண்​டலூர் காப்பு காடு​களை​யொட்​டிய பகு​தி​கள் முழு​வதும் குப்பை கொட்டும் இடமாக மாறிக் கொண்​டிருக்​கிறது. பிளாஸ்​டிக் கழி​வு​களை வனப்​பகு​தி​யில் போடு​வ​தால் வனத்​தில் உள்ள மண் மலட்டு தன்​மை​யா​வதற்​கும், அங்​குள்ள பல அரிய வகை​யான மரங்​கள் அழிந்து போவதற்​கும் வாய்ப்​பு​கள் அதி​கம். குடிமகன்​கள் குடித்​து​விட்டு பாட்​டில்​களை அங்​கேயே உடைத்து போடு​வ​தால் வன விலங்​கு​களுக்கு ஆபத்து ஏற்படும் அபா​யம் உள்​ளது. உடைந்த பாட்டில் துண்​டு​கள் வனவிலங்​கு​களின் காலில் குத்​தி, காயமடைந்து இதனால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்​படும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மான்​கள் தொடர்ந்து இறந்து வரு​கின்​றன. இன்​னும் எத்​தனை மான்​களை உயிர் பலி​யாக தரப்​போகிறோம் என்​பதை குப்பை கொட்​டும் ஊராட்சி நிர்​வாகங்​களும், வனத்​துறை​யும், தமிழக அரசும், பொது​மக்​களும் சிந்​திக்க வேண்​டும். பிளாஸ்​டிக் கழி​வு​களை கட்​டுப்​படுத்த மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்​க​வில்​லை. பிளாஸ்​டிக் குப்​பைகளை முழு​மை​யாக அப்​புறப்​படுத்த வனத்​துறை நடவடிக்கை எடுக்​க​வில்​லை. வனத்​துறை​யின் தொடர் கண்​காணிப்பு இருந்​தால் மட்​டுமே பிளாஸ்​டிக் கழி​வு​கள் கொட்​டப்​படு​வதை முற்​றி​லு​மாக நிறுத்த முடி​யும்.

இல்​லை​யெனில் வனம் மற்​றும் வன விலங்​கு​களின் அழிவை யாராலும் தடுக்க முடி​யாது. வண்​டலூர் காப்பு காடு​களை ஒட்​டி​யுள்ள ஊராட்​சிகளில் குப்​பைகள் அதிக அளவில் சேகர​மாகிறது. இந்த குப்​பைகளை கையாள்​வ​தில் நிர்​வாக சிக்​கல் ஏற்​படு​கிறது.

அதிக அளவில் குப்​பைகள் எடுத்​தால் செல​வினங்​கள் காண்​பிப்​ப​தில் ஊராட்சி நிர்​வாகங்​களுக்கு பிரச்​சினை ஏற்​படு​கிறது. இதனால் குப்​பைகளை வனப்​பகு​தி​யில் கொட்​டு​கின்​றனர். எனவே மாவட்ட நிர்​வாகம் வன வளத்தை கெடுப்​போர் மீது குறைந்​த​பட்ச நடவடிக்​கை​யா​வது எடுக்க வேண்​டும்​ என, இயற்​கை ஆர்​வலர்​கள்​ மற்​றும்​ வன உயி​ரின பாது​காவலர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x