Last Updated : 14 Jun, 2025 04:06 PM

 

Published : 14 Jun 2025 04:06 PM
Last Updated : 14 Jun 2025 04:06 PM

திருக்கழுகுன்றத்தில் ரூ.7.60 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: பாசனத்துக்கு தூய்மையான நீர் கிடைக்கும்

திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் ஸ்வச் பாரத் மிஷன்-2 திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

​செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்​சி​யில் நிலத்​தடி நீர்​மட்​டத்தை உயர்த்​தும் வகை​யில் ஏரி, குளங்​கள் உள்ளிட்ட நீர் ஆதா​ரங்​களை தூர்​வாரி சீரமைக்​கும் பணி​களுக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​மூலம், பேரூ​ராட்சி பகு​தி​யில் 16 குளங்​கள் சீரமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்​நிலை​யில், பேரூ​ராட்சி பகு​தி​யில் பாதாள சாக்​கடை வசதி​ இல்​லாத​தால், குடி​யிருப்​பு​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழி​வுநீர் ஏரி மற்​றும் குளங்​களில் கலக்​கும் சூழல் இருந்து வரு​கிறது.

அதனால், நீர் நிலைகளை பாது​காக்​கும் வகை​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டும் என அப்​பகுதி பொது​மக்கள் நீண்ட கால​மாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், கழி​வுநீர் கசடு மேலாண்மை பணி​களை மேற்​கொள்​ளும் வகை​யில் ஸ்வச் பாரத் மிஷன்-2 திட்​டத்​தில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க ரூ.7.50 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், பேரூ​ராட்​சி​யின் 18 வது வார்டு வடக்​குப்​பட்டு பகு​தி​யில் அமைந்​துள்ள 11.2 ஏக்​கர் பரப்​பள​வில் உள்ள நிலத்​தின் ஒருபகு​தி​யில், சுமார் 2 ஏக்​கர் பரப்​பள​வில் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைப்​ப​தற்​கான கட்​டு​மான பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன.

இதில், வழக்​க​மாக கழி​வுநீர் மட்​டுமே சுத்​தி​கரிப்பு செய்​யப்​படும் நிலை​யில், இங்கு முதன்​முறை​யாக அன்​றாட பணி​களின்​போது குடி​யிருப்​பு​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழி​வுநீரும் சுத்​தி​கரிப்பு செய்​யப்பட உள்​ளது. இதனால், பேரூ​ராட்சி பகு​தி​யில் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளங்​களில் கழி​வுநீர் கலப்​பதை தடுப்​ப​தற்​கான வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், நீர் நிலைகள் தூய்​மையடை வதோடு அதனருகே உள்ள விவ​சா​யிகள் பாசனத்​துக்கு தூய்​மை​யான நீரை பெறு​வதற்​கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்​து, திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி தலை​வர் யுவ​ராஜ் கூறிய​தாவது: ஸ்வச் பாரத் மிஷன்-2 திட்​டத்​தில் திருக்​கழுக்​குன்​றம் அடுத்த வடக்​குப்​பட்டு பகு​தி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கிறது. இதன் முக்​கி​யத்​து​வம் என்​னவென்​றால், வீடு​களில் அன்​றாட தேவை​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு கழி​வுநீ​ராக வெளி​யேறி நீர் நிலைகளில் கலக்​கும் கழி​வுநீரை, சுத்​தி​கரிப்பு நிலை​யத்​துக்கு பம்​பிங் செய்து சுத்​தி​கரிக்​கப்பட உள்​ளது.

அதற்​காக, சதுரங்​கப்​பட்​டினம் செல்​லும் சாலை​யோரம், நெடுஞ்​சாலைத்​துறை அலு​வல​கம் அருகே என மொத்​தம் 4 இடங்​களில் பம்​பிங் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கிறது. இதனால், பேரூ​ராட்சி பகு​தி​யில் உள்ள 2 ஏரி​கள், 4 குளங்​களில் கழி​வுநீர் கலப்​பது முற்​றி​லும் தடுக்​கப்​படு​கிறது. மேலும், சுத்​தி​கரிக்​கப்​பட்ட நீரை பாசனத்​துக்கு பயன்​படுத்​தும் வகை​யில் அப்​பகு​தி​யில் சுமார் 1 ஏக்​கர்பரப்​பள​வில் நெல் பயி​ரிட​வும் திட்​ட​மிட்​டுள்​ளோம்.

யுவ​ராஜ்

இதே​போல், அதே ​பகு​தி​யில் கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக குப்பை கொட்​டப்​பட்டு தேங்​கி​யுள்​ளன. இவற்​றை, பயோ மைனிங் மூலம் தூய்மை படுத்​து​வதற்​கான கட்​டு​மான பணி​களை மேற்​கொள்ள, மேற்​கண்ட திட்​டத்​தில் ரூ.84 லட்​சம் நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x