Last Updated : 28 Apr, 2025 02:15 PM

 

Published : 28 Apr 2025 02:15 PM
Last Updated : 28 Apr 2025 02:15 PM

கூவம் ஆற்றின் தடுப்பணையில் குவியும் குப்பை!

ஆவடி அருகே கூவம் ஆற்​றின் குறுக்கே உள்ள தடுப்​பணை பகு​தி​யில் குவி​யும் குப்​பைகளால் சுகா​தார சீர்​கேடு ஏற்​படும் அபா​யம் உள்​ளது என சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​ சாட்​டு​கின்​றனர். திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பாயும் முக்​கிய ஆறுகளில் ஒன்​றான கூவம், ராணிப்​பேட்டை மாவட்​டம் கேசாவரம் கிராமத்​தில் கல்​லாற்​றின் குறுக்கே உள்ள அணைக்​கட்​டிலிருந்து உரு​வாகி, 72 கி.மீ. பயணித்​து, சென்​னை​யில் நேப்​பியர் பாலம் அருகே வங்​காள விரி​குடா கடலில் கலக்​கிறது.

திரு​வள்​ளூர், பூந்​தமல்​லி, ஆவடி வட்ட பகு​தி​களின் விவ​சாய நிலங்​களின் முக்​கிய நீர் ஆதா​ர​மாக​வும், அப்​பகு​தி​களின் குடிநீர் ஆதா​ர​மாக​வும் விளங்​கு​கிறது. இந்​நிலை​யில், ஆவடி அருகே கூவம் ஆற்​றின் குறுக்கே உள்ள தடுப்​பணை பகு​தி​யில் குவி​யும் குப்​பை​யால் சுகா​தார சீர்​கேடு ஏற்​படும் அபா​யம் உள்​ளது என சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர். இதுகுறித்​து, சமூக ஆர்​வலர்​கள் தெரி​வித்​த​தாவது: ஆவடி அருகே உள்ள தண்​டுரை, அணைக்​கட்​டுசேரி, சோராஞ்​சேரி, கண்​ண​பாளை​யம் உள்​ளிட்ட பகு​தி​களைச் சேர்ந்த விவசாயிகள் கூவம் ஆற்று பாசனத்தை நம்பி நெல், கத்​திரிக்​காய், வாழை உள்​ளிட்ட பயிர் சாகுபடி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், ஆவடி- காம​ராஜர் நகருக்​கும், ஆவடி அருகே உள்ள கண்​ண​பாளை​யம் ஊராட்சி பகு​திக்​கும் இடையே கடந்த 17 ஆண்​டு​களுக்கு முன்பு கூவம் ஆற்​றின் குறுக்கே தமிழக அரசால் தடுப்​பணை அமைக்​கப்​பட்​டது. இந்த தடுப்​பணை​யில் ஆண்​டு​தோறும் பரு​வ​மழை​யின்​போது கூவம் ஆற்​றில் பெருக்​கெடுத்து ஓடும் மழைநீர் தேக்கி வைக்​கப்​படு​வ​தால் விவ​சா​யிகள் பலனடைந்து வரு​வதோடு, ஆவடி மாநக​ராட்​சிக்​குட்​பட்ட காம​ராஜர் நகர், தண்​டுரை, கண்​ண​பாளை​யம், அணைக்​கட்​டுசேரி, சோராஞ்​சேரி, கண்​ணபாளை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் நிலத்​தடி நீர் மட்​ட​மும் உயர்ந்து வரு​கிறது.

ஆவடி அருகே கண்ணபாளையம் ஊராட்சி அருணாசல நகர்
பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் குவியும் குப்பை.

இச்​சூழலில், ஆவடி-​காம​ராஜர் நகருக்​கும், பூந்​தமல்லி ஊராட்சி ஒன்​றி​யத்​துக்​குட்​பட்ட கண்​ண​பாளை​யம் ஊராட்சி பகு​திக்​கும் இடையே கூவம் ஆற்​றின் குறுக்கே உள்ள இந்த தடுப்​பணை​யின் ஒரு​புற​மான கண்​ண​பாளை​யம் ஊராட்​சி, அருணாச்சல நகர் பகு​தி​யில் கடந்த 2 ஆண்​டு​களாக குப்பை குவிந்து வரு​கிறது.

இதற்கு காரணம், கண்​ண​பாளை​யம் ஊராட்​சி​யில் புதி​தாக உரு​வாகி​யுள்ள குடி​யிருப்பு பகு​தி​களான வி.ஜி.​வி.நகர், அருணாச்சல நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் உள்​ளிட்ட 300-க்​கும் மேற்​பட்ட வீடு​களில் வசிக்​கும் பொது​மக்​களில் பெரும்​பாலானோர் தங்​கள் வீடு​களில் சேரும் குப்​பையை தடுப்​பணை பகு​தி​யில் கொட்டி வரு​வது​தான்.

ஆகவே, தடுப்​பணையை ஒட்​டி​யுள்ள பகு​தி​களில் நிலத்​தடி நீர் மாசடைந்து வரு​கிறது. மேலும், தடுப்​பணையை ஒட்​டி​யுள்ள உயர் மட்ட பாலத்தை பயன்​படுத்​தும், ஆவடி மாநக​ராட்சி மற்​றும் கண்​ண​பாளை​யம் ஊராட்சி பகு​தி​களைச் சேர்ந்த பொது​மக்​கள் மூச்சு திணறல் உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இதனால் சுகா​தார சீர்​கேடு ஏற்​படும் அபா​யம் உள்​ளது. இதனை தடுக்க சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x