Last Updated : 01 Mar, 2025 04:57 PM

2  

Published : 01 Mar 2025 04:57 PM
Last Updated : 01 Mar 2025 04:57 PM

பராமரிப்பின்றி பாழாகும் பருத்திப்பட்டு பசுமை பூங்கா

ஆவடி​யில் ரூ.28 கோடி மதிப்​பில் உருவாக்​கப்​பட்ட பருத்​திப்​பட்டு பசுமைப் பூங்கா, போதிய பராமரிப்​பின்றி பாழாகி வருவதாக பொது​மக்கள் வேதனை தெரி​வித்​துள்ளனர். திரு​வள்​ளூர் மாவட்டம் ஆவடி​யில் உள்ள பருத்​திப்​பட்டு பகுதி​யில் 87 ஏக்கர் பரப்​பள​வில் ஏரி அமைந்​துள்ளது.

இந்த ஏரி ஆவடி பகுதி​யின் முக்கிய நீரா​தா​ரமாக இருந்து வந்தது. நாளடை​வில் இந்த ஏரியின் ஒரு பகுதி வீட்டு​வசதி வாரிய குடி​யிருப்பாக மாற்​றப்​பட்​டது. எஞ்சி​யுள்ள ஏரியின் ஒரு பகுதி​யில், ஆவடி மாநக​ராட்​சிக்கு உட்பட்ட வீடு, உணவகங்கள் உள்ளிட்ட பகுதி​களில் இருந்து வெளி​யேறும் கழிவுநீர் இங்கு வந்து கலக்​கிறது.

இதையடுத்து, ஏரியின் சுற்றுச்​சூழலை மீட்​டெடுக்​கும் வகையில் ரூ.28.16 கோடி மதிப்​பில் பருத்​திப்​பட்டு ஏரி பசுமைப் பூங்கா உருவாக்​கப்​பட்டு 2019-ல் மக்கள் பயன்​பாட்டுக்காக திறக்​கப்​பட்​டது. இப்பூங்கா​வில் ஏரியைச் சுற்றி​லும் 3 கி.மீ. நீளத்​துக்கு நடைபாதை, திறந்​தவெளி அரங்​கம், விளை​யாட்டு உபகரணங்​கள், வாகனங்கள் நிறுத்​து​மிடம், உணவக கட்டிடம், படகு குழாம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்​தப்​பட்டன. இந்நிலை​யில், இப்பூங்கா முறையாக பராமரிக்​கப்​பட​வில்லை என குற்​றச்​சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொது​மக்கள் கூறிய​தாவது: பருத்​திப்​பட்டு பசுமைப் பூங்கா ஆவடி மட்டுமின்றி சுற்றி​யுள்ள பகுதி​களில் வசிக்​கும் பொது​மக்​களுக்​கும் மிகச் சிறந்த பொழுது​போக்கு மையமாக திகழ்​கிறது.ஆனால், இந்த பூங்​கா​வில் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. குறிப்​பாக, முன்பு தனியார் நிறு​வனம் மூலம், 10-க்​கும் மேற்​பட்ட ஊழியர்களை கொண்டு துப்புரவு பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்தது.

சுத்​தி​கரிக்​கப்​படா​மல் ஏரி​யில் நேரடியாக கலக்​கும் கழி​வு நீர்​.

தற்போது பணி​யில் 2 ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்​டுள்​ளனர். அவர்கள் பூங்​கா​வின் முகப்பு பகுதி​யில் மட்டும் தூய்​மை பணியை செய்​கின்​றனர். நடைப​யிற்சி மேற்​கொள்​ளும் பாதை​யில் அவர்கள் சுத்​தப்​படுத்துவது கிடை​யாது. இதனால், பாதை முழு​வதும் குப்​பை கூளமாக காட்சி அளிக்​கிறது.

அத்துடன், பூங்​கா​வின் ஒரு புறம் சுவர் கட்டப்​பட்​டுள்​ளது. மற்றொரு புறம் இரும்​புக் கம்பிகளால் ஆன தடுப்பு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தடுப்புகள் வழியாக நாய்கள் பூங்கா​வுக்​குள் வந்து நடைபாதை​யில் அசுத்தம் செய்​கின்றன. இதனால், நடைப​யிற்சி மேற்​கொள்வோருக்கு சுகாதார சீர்​கேட்டை ஏற்படுத்து​கிறது. மேலும், ஏரிக்​குள் வரும் கழிவு நீரை சுத்​தி​கரிப்​ப​தற்காக கழிவுநீர் சுத்​தி​கரிப்பு மையம் உள்ளது.

ஆனால், அவை முறையாக செயல்​படாத​தால் மழைநீர் வடிகால்​வாய் வழியாக கழிவுநீர் சேர்ந்து நேரடியாக ஏரியில் வந்து கலந்து விடு​கிறது. அதேபோல், பாது​காப்பு பணியில் முன்பு தனியார் செக்​யூரிட்டி நிறு​வனத்​தைச் சேர்ந்த 8-க்​கும் மேற்​பட்ட பாது​காவலர்கள் இருந்​தனர்.

அவர்​களுக்கு போதிய ஊதியம் வழங்​காத​தால் தற்போது 2 பேர் மட்டுமே பாது​காப்பு பணியில் உள்ளனர். இதனால், பூங்கா​வுக்கு வரும் இளம் ஜோடிகளின் அத்து​மீறல்கள் குடும்பத்​தினருடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்​கிறது. மேலும், பூங்​கா​வில் பாது​காப்பு பணியை மேற்​கொள்​வதற்காக போலீ​ஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்​தப்​பட்​டுள்​ளனர். ஆனால், அவர்கள் வாரத்​துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வருகின்​றனர்.

அவ்வாறு வந்தா​லும் பூங்கா முழு​வதும் சென்று பாது​காப்பு பணியை மேற்​கொள்வது கிடை​யாது. முகப்பு பகுதி​யில் ஒருசில மணி நேரம் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு சென்று விடு​கின்​றனர். பூங்​கா​வின் ஒரு பகுதி​யில் உள்ள கோயி​லின் அருகில் நுழைவு வாயில் உள்ளது.

நடைபாதை அருகே புதர்​மண்டி கிடக்​கிறது.

அங்கு மாலை நேரத்​தில் இளைஞர்கள் சிலர் அமர்ந்து கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்​படுத்து​கின்​றனர். இதனால், அவ்வழியாக பூங்கா​வுக்கு வரும் பெண்கள் அச்சப்​படு​கின்​றனர். பூங்​கா​வின் ஒரு பகுதி​யில் கழிப்பறை கட்டப்​பட்​டுள்​ளது. ஆனால், தண்ணீர் வசதி செய்​யப்​படாத​தால் அதைப் பயன்​படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பூங்​கா​வின் சில இடங்​களில் புதர்கள் மண்டி உள்ளது. இதனால், அங்கு பாம்​புகள் நடமாட்டம் உள்ள​தால், நடைப​யிற்சிக்கு வருவோர் அச்சம் அடைகின்​றனர். எனவே, அப்பகு​திகளை சுத்​தப்​படுத்தி அழகிய பூங்கா அமைக்க வேண்​டும்.

அதேபோல், பூங்​கா​வில் உணவகம் அமைப்​ப​தற்கான கட்டிடம் கட்டப்​பட்​டுள்​ளது. ஆனால், கட்​டிடம் இதுவரை பயன்​பாட்டுக்கு கொண்டு வரப்​பட​வில்லை. எனவே, அந்த கட்டிடத்​தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் குறைந்த விலை​யிலான உணவகம், ஆவின் பாலகம் ஆகிய​வற்றை திறக்க வேண்​டும்.

இது பூங்கா​வுக்கு வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்​கும். இரவு 7.30 மணிக்கே பூங்கா​வுக்கு வரும் அனைவரை​யும் வெளி​யேற்றி பூட்டிவிடு​கின்​றனர். பொது​மக்கள் அமருவதற்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்​டும். மின்​விளக்குகளை சீரமைக்க வேண்​டும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து, ஆவடி மாநக​ராட்சி ஆணையர் எஸ்.கந்​தசாமி​யிடம் கேட்​ட​போது, “பருத்​திப்​பட்டு பசுமைப் பூங்​கா​வில் தூய்​மைப் பணி மற்றும் பாது​காப்பு பணிகளை மேற்​கொள்ள கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்​கப்​படும். அதேபோல், நாய்கள் வருவதை தடுக்​க​வும், உணவகம் திறக்​க​வும் நடவடிக்கை எடுப்​ப​தோடு, பூங்கா கூடுதல் நேரம் திறக்​கப்​படுவது குறித்​தும் பரிசீலனை செய்​யப்​படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x