Published : 03 Feb 2025 03:10 PM
Last Updated : 03 Feb 2025 03:10 PM
முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை என வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வன விலங்குகளை கண்டு ரசிப்பதற்காக வனத்துறையினர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் காலை, மாலை வேளைகளில் அழைத்து செல்கின்றனர்.
இதுதவிர, கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்கு செங்குத்தான மலைப்பாதை செல்கிறது.
இந்நிலையில், தெப்பக்காடு - மசினகுடி இடையே சாலையோரம் நேற்று 2 காட்டு யானைகள் வந்தன. திடீரென ஆக்ரோஷமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதியவாறு சண்டையிட்டன.
சாலையின் நடுவே யானைகள் தந்தத்தால் குத்தி மோதிக் கொண்டதை பார்த்து வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். யானைகள் சமாதானம் அடைந்து காட்டுக்குள் சென்ற பிறகு வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT