Published : 15 Nov 2025 07:06 AM
Last Updated : 15 Nov 2025 07:06 AM

அமைச்சருடன் விமானத்தில் பயணித்த குழந்தைகள்

அமைச்சர் கீதாஜீவனுடன் விமானத்தில் தூத்துக்குடி வந்த சென்னையை சேர்ந்த குழந்தைகள்.

தூத்துக்குடி: குழந்​தைகள் தினத்தை முன்​னிட்டு சென்​னையை சேர்ந்த, பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய 30 குழந்​தைகள் அமைச்சர் பி.கீ​தாஜீவனுடன் விமானத்​தில் பயணித்​தனர். ரெயின் டிராப்ஸ் அறக்​கட்​டளை ‘வானமே எல்​லை' எனும் திட்​டத்​தின் கீழ் அனந்​தம் நிறு​வனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்​கம் மற்​றும் வேல்ஸ் வித்​யாலயா கல்விக் குழு​மம் ஆகிய​வற்​றுடன் இணைந்து இந்த விமானப் பயணத்​துக்கு ஏற்​பாடு செய்​திருந்​தது.

சென்​னை​யில் இருந்து 30 குழந்​தைகள் தங்​கள் முதல் விமானப் பயணத்தை நேற்று காலை தொடங்​கினர். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் அக்​குழந்​தைகளு​டன் பயணித்​து, அவர்​களு​டன் கலந்​துரை​யாடி உற்​சாகமூட்​டி​னார்.

இசையமைப்​பாள​ரும், ரெயின் டிராப்ஸ் நல்​லெண்ண தூதரு​மான ஏ.ஆர்​.ரெஹா​னா, ரெயின் டிராப்ஸ் நிறு​வனர் அரவிந்த் ஜெய​பால், விஜிபி குழு​மத் தலை​வர் வி.ஜி.பி.​சாந்​தோசம், மாநில திட்ட ஆணைய உறுப்​பினர் சுல்​தான் அகமது இஸ்​மா​யில், அனந்​தம் நிறு​வனர் பகீரதி ராமமூர்த்​தி, ஆர்​கானிக் உணவு நிபுணர் மண் வாசனை மேனகா உள்​ளிட்​டோரும் இந்​தப் பயணத்​தில் பங்கேற்றனர்.

தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் வேல்ஸ் வித்​யாலயா கல்விக் குழு​மத்​தின் மாணவர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் நிர்​வாகத்​தினர் குழந்​தைகளை உற்​சாக​மாக வரவேற்​றனர்.

ஆட்​சி​யருடன் கலந்துரையாடல்.. தொடர்ந்து, அம்​பாச​முத்​திரம் வேல்ஸ் வித்​யால​யா​வுக்கு சென்ற குழந்​தைகள், அங்கு நடை​பெற்ற சிறப்பு கொண்​டாட்​டத்​தில் கலந்​து​கொண்​டனர். இன்று இக்​குழந்​தைகள் தென்​காசி மாவட்ட ஆட்​சி​யரை சந்​தித்து கலந்​துரை​யாடு​கின்​றனர். தொடர்ந்​து, அமர்​சேவா சங்​கம், குற்​றாலம் அருவி மற்​றும் திரில் பார்க் ஆகிய இடங்​களை பார்​வை​யிடு​கின்​றனர். பின்​னர் பொதிகை எக்​ஸ்​பிரஸ் ரயில்​ மூலம்​ சென்​னை திரும்​ப உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x