Published : 11 Nov 2025 06:05 AM
Last Updated : 11 Nov 2025 06:05 AM

சென்னை ஐஐடி உதவியுடன் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு

சென்னை: கல்​லூரி செமஸ்​டர் தேர்​வில் மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிப்​பது தொடர்​பாக சென்னை ஐஐடி உதவி​யுடன் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி கவுன்​சில் முடிவுசெய்​துள்​ளது.

தற்​போது கல்​லூரி செமஸ்​டர் தேர்​வு​களில் மாணவர்​களின் நினை​வாற்​றலைச் சோதிக்​கும் வகை​யில்​தான் வினாக்​கள் கேட்​கப்​படு​கின்​றன. சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணும் திறன், சிந்​தனையைத் தூண்​டும் திறன், ஆரா​யும் திறன் போன்ற திறன்​களை மதிப்​பீடும் வகையி​லான வினாக்​கள் கேட்​கப்​படு​வ​தில்லை என்ற கருத்து பரலாக நில​வு​கிறது.

இந்​நிலை​யில், மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிக்க சென்னை ஐஐடி உதவி​யுடன் கலை அறி​வியல் கல்​லூரி, பாலிடெக்​னிக் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி கவுன்​சில் முடிவு செய்​துள்​ளது.

இது தொடர்​பாக உயர்​கல்வி கவுன்​சில் துணைத்​தலை​வர் எம்​.பி.​விஜயகு​மார் கூறிய​தாவது: பொது​வாகவே நமது மாணவர்​களுக்கு சிக்​கல்​களுக்​குத் தீர்வு காணும் திறன், ஆரா​யும் திறன் குறை​வாக உள்​ளது. காரணம் மாணவர்​களின் நினை​வாற்​றலைச் சோதிக்​கும் வகை​யில்​தான் தேர்​வு​களில் வினாக்​கள் கேட்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் தேர்வு நோக்​குடன்​தான் அவர்​களும் பாடங்​களை படிக்​கின்​றனர்.

இந்​நிலையை மாற்றி மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வகையி​லான கேள்வி​களைத் தயாரிப்​பது தொடர்​பாக சென்னை ஐஐடி உதவி​யுடன் கலை அறி​வியல் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி, பாலிடெக்​னிக் கல்​லூரி ஆசிரியர்​கள் 15 ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்​துள்​ளோம். இதன்​மூலம் மாணவர்​கள் வெறுமனே பாடங்​களை மனப்​பாடம் செய்​யாமல் கருத்​துகளை தெளி​வாகப் புரிந்து விடையளிக்​கக் கூடிய சூழல் ஏற்​படும்.

முதல்​கட்​டமாக தேசிய அளவி​லான நிபுணர்​களைக் கொண்டு கல்​லூரி ஆசிரியர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டது. அடுத்த கட்​ட​மாக பயிற்சி பெற்ற இந்த ஆசிரியர்​கள் பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி அளவில் மற்ற ஆசிரியர்​களுக்கு வி​னாத்​தாள் தயாரிப்பு குறித்​து பயிற்​சி அளிப்​பார்​கள்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x