Published : 10 Nov 2025 06:32 AM
Last Updated : 10 Nov 2025 06:32 AM

சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள்: நவ.14-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் ஓராண்டு சான்​றிதழ் படிப்​பு​களில் 1,149 காலி இடங்​கள் உள்​ளன. தகுதி உள்​ளவர்​கள் நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் 2025-26-ம் கல்வி ஆண்​டில் சேர அவசர சிகிச்​சை, மயக்க மருந்​து, அறுவை சிகிச்​சை, டயாலிசிஸ், எலும்​பியல், சுவாச சிகிச்​சை, இதய​வியல், இசிஜி, மனநலம், மருத்​து​வப் பதிவேடு ஆகிய பிரிவு​களில் டெக்​னீஷியன்​கள் உள்​ளிட்ட ஓராண்டு மருத்​து​வச் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

ஸ்டான்​லி​யில் 393 இடங்​கள், கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் (கேஎம்​சி) 319, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யில் (எம்​எம்​சி) 254, கிண்டி கலைஞர் மருத்​து​வக் கல்​லூரி​யில் 135, ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 48 என மொத்​த​மாக சென்​னை​யில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் இந்த படிப்​பு​களில் மொத்​தம் 1,149 காலி இடங்​கள் நிரப்​பப்​ப​டாமல் உள்​ளன.

பிளஸ்-2 அறி​வியல் பிரி​வில் 40 சதவீதத்​துக்கு குறை​யாமல் மதிப்​பெண் பெற்ற, 17 வயது நிரம்​பிய​வர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். பல்​நோக்கு மருத்​து​வப் பணி​யாளர் படிப்​புக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றால் போதும். சென்னை மாவட்​டத்தை சேர்ந்த தகு​தி​யுடைய விண்​ணப்​ப​தா​ரர்​கள் மேற்​கண்ட சான்​றிதழ் வகுப்​பு​களில் சேர, அந்​தந்த அரசு மருத்​து​வக் கல்​லூரி​களின் துணை முதல்​வரை சந்​தித்து நவ.14-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x