Published : 08 Nov 2025 06:50 AM
Last Updated : 08 Nov 2025 06:50 AM

படைப்புகளில் தனித்துவம் மிளிர வேண்டும்: மாணவர்களுக்கு கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: ‘ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்’ என்று கைத்​தறி துறை செயலர் வி.அ​முதவல்லி தெரி​வித்​தார். சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில் உள்ள திரு​வள்​ளுவர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக அரசின் கைத்​தறி, துணி நூல், கைவினைப் ​பொருள், ஜவுளி மற்​றும் காதி துறை​யின் செயலர் அமுதவல்லி கலந்​து​கொண்டு சிறப்​பிடம் பெற்ற மாணவ-​மாணவி​களுக்கு பதக்​கங்​கள், விருதுகள் மற்​றும் பட்​டங்​களை வழங்​கி​னார். பேஷன் டெக்​னாலஜி இளநிலை படிப்​பில் 250 பேர், முது​நிலை படிப்​பில் 34 பேர் என மொத்​தம் 284 பேர் பட்​டம் பெற்​றனர்.

அதைத் தொடர்ந்து அமுதவல்லி பட்​டமளிப்​பு​விழா உரை​யாற்​றும்​போது கூறிய​தாவது: ‘ஆள் பாதை ஆடை பாதி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்​டு. அந்த வகை​யில், ஒரு​வரின் ஆளு​மையை மேம்​படுத்​தும் உன்​னத​மான பணியை ஆடை வடிவ​மைப்பு மாணவர்​களாகிய நீங்​கள் செய்​கிறீர்​கள்.

ஆடை வடிவ​மைப்பு துறை​யில் ஜொலிக்க வேண்​டு​மா​னால் புது​மை​யும் படைப்​பாற்​றலும் அவசி​யம் இருக்க வேண்​டும். கூடவே பராம்​பரிய​மும் மிக்​க​தாக இருந்​தால் அது அனை​வரை​யும் ஈர்க்​கும். இன்​றைய உலகில் தொழில்​நுட்​பங்​கள் புதி​தாக புதி​தாக வந்த வண்​ணம் உள்​ளன. எனவே, மாணவர்​கள் தொழில்​நுட்ப திறனை தொடர்ந்து புதுப்​பித்து வரவேண்​டும். உங்​கள் படைப்​பு​களில் தனித்​து​வம் மிளிர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிஃப்ட் முன்​னாள் மாணவரும், ஜேக்​கப் அண்ட் க்லூஸ்​டர் ஃபார்ம்ஸ் நிறு​வனத்​தின் தலைமை புதுமை கண்​டு​பிடிப்பு அலு​வலரு​மான ஷாமி ஜேக்​கப் பேசும்​போது, “ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, மெஷின் லேர்​னிங், இன்​டர்​நெட் ஆப் திங்க் என தொழில்​நுட்​பத் துறை நாளுக்கு நாள் வளர்ந்​து​கொண்டே இருக்​கிறது. எனவே அதற்கு ஏற்ப நம்மை தயார்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். அதோடு சமூக அக்​கறை இருக்க வேண்​டியதும் அவசி​யம்” என்​றார்.

நிஃப்ட் டீன் நூபுர் ஆனந்த் பட்​டமளிப்பு உறு​தி​மொழி வாசித்​தார். முன்​ன​தாக, நிஃப்ட் இயக்​குநர் திவ்யா சத்​யன் வரவேற்று ஆண்​டறிக்கை சமர்ப்​பித்​தார். அப்​போது, “இந்த ஆண்டு பட்​டம் பெற்​றவர்​களில் 90 சதவீதம் பேர் வளாக நேர்​காணல் வாயி​லாக முன்​னணி நிறு​வனங்​களில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர்.

எஞ்​சிய 10 சதவீதம் பேர் மேற்​படிப்​புக்​கும், தொழில்​முனை​வோர் ஆகவும் செல்​கிறார்​கள்” என்​றார். நிறை​வாக, நிஃப்ட் இணை இயக்​குநர் டி.பிர​வீன் நாக​ராஜன் நன்றி கூறி​னார். விழா​வில் நிஃப்ட் வளாக கல்வி ஒருங்​கிணைப்​பாளர் பீரகா செலாப​தி, ஆசிரியர்​கள், மாணவ-​மாணவி​கள்​, பெற்​றோர்​ கலந்​து​கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x