Published : 01 Nov 2025 12:36 AM
Last Updated : 01 Nov 2025 12:36 AM

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அடுத்த ஆண்டு பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான பொதுத்​தேர்​வு​கள் பிப். 17-ல் தொடங்கி ஏப்​. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்பு கல்விஆண்​டுக்​கான பொதுத் தேர் வுக்கு மாணவர்​கள் தயா​ராக ஏது​வாக, தற்​காலிக தேதி பட்டியலைசிபிஎஸ்இ கடந்த செப். 2-ம் தேதி வெளி​யிட்​டது.

இந்த நிலை​யில், பள்​ளி​களின் வேண்​டு​கோளை ஏற்​று, அதில் சில திருத்​தங்​கள் செய்து இறுதி தேர்​வுக்​கால அட்​ட​வணை தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்ளது.
அதன்​படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்​வு​கள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடை​யும். அதே​போல, 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் பிப்.15-ல்
தொடங்கி ஏப்​.9-ம் தேதி முடிவடை​யும். தேர்​வு​கள் காலை அமர்​வில் 10.30 மணி முதலும், மதிய அமர்​வில் 1.30 மணி முதலும் தொடங்​கும்.

விரி​வான தேர்​வுக் கால அட்​ட​வணையை www.cbse.gov.in என்ற இணை​யதளத்​தில் இருந்து மாணவர்​கள், ஆசிரியர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். தேர்வு தொடங்​கு​வதற்கு 110 நாட்​களுக்கு முன்​பாகவே அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்கு மட்​டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன. முதல்​கட்ட தேர்​வு​கள் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்ள நிலை​யில், 2-ம் கட்ட தேர்​வு​களை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x