Published : 30 Oct 2025 06:22 AM
Last Updated : 30 Oct 2025 06:22 AM

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை: குலுக்கல் முறையில் மாணவர்கள் நாளை தேர்வு

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பித்த மாணவர்​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணி​கள் நாளை (அக்​டோபர் 31) நடை​பெறவுள்​ளன. இலவச கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

மாநிலம் முழு​வதுள்ள 7,717 தனி​யார் பள்​ளி​களில் சுமார் ஒரு லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாகப் படிக்​கலாம்.

தமிழகத்​தில் 2013-ல் அமலான இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை 5 லட்​சம் குழந்​தைகள் படிக்​கின்​றனர். இந்த திட்​டத்​துக்​கான நிதியை மத்​திய அரசு வழங்​காத​தால், 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான மாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்​வித் துறை நிறுத்தி வைத்​திருந்​தது. இதுகுறித்த வழக்​கில் மத்​திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

உச்ச நீதி​மன்​ற​மும் சில அறி​வுறுத்​தல்​களை வழங்​கியது. தொடர்ந்​து, ஆர்​டிஇ திட்​டத்​தில் தனது பங்​களிப்பு நிதியை மத்​திய அரசு விடு​வித்​தது. அதன்​பின் நடப்​பாண்​டில் ஆர்​டிஇ மாணவர் சேர்க்கை பணி​கள் தாமத​மாக தொடங்​கின. இதையடுத்​து, பள்​ளி​களில் ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்ட மாணவர்​களில் தகு​தி​யானவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டில் பதிவு செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டது.

அதன்​படி, மாநிலம் முழு​வதும் உள்ள 7,717 பள்​ளி​களில் எல்​கேஜி வகுப்​பில் சேர 81,927 குழந்​தைகளும், ஒன்​றாம் வகுப்​பில் சேர 89 பேரும் விண்​ணப்​பித்​தனர். அவற்​றில் தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​யும் பணி​கள் இன்​றும், நாளை​யும் (அக்​. 30,31) நடத்​தப்பட உள்ளது. அதன்​படி ஒதுக்​கப்​பட்​டுள்ள இடங்​களை​விட விண்​ணப்​பங்​கள் குறை​வாக உள்ள பள்​ளி​களில் தகு​தி​யுள்ள மாணவர்​களின் சேர்க்கை இன்று நடை​பெறவுள்​ளது.

தொடர்ந்​து, நிர்​ண​யிக்​கப்​பட்ட இடங்​களை​விட அதிக விண்​ணப்​பங்​கள் வந்த பள்​ளி​களில் தலைமை ஆசிரியர், பெற்​றோர்​கள் முன் வெளிப்​படை​யான குலுக்​கல் முறை​யில் நாளை மாணவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். இதை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் மற்​றும் கண்​காணிப்பு குழுக்​கள் மேற்​பார்​வை​யிடு​வார்​கள். இது தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் 14417 என்ற உதவி மைய எண்​ணில் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம். இவ்​வாறு பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x