Published : 29 Oct 2025 05:58 AM
Last Updated : 29 Oct 2025 05:58 AM

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு

மோகனசங்கர் சிவபிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால், தலப்பில் பிரதீப்.

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு ஆகிய துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோருக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய அறி​வியல் விருது (ராஷ்ட்​ரிய விஞ்​ஞான் புரஸ்​கார்) வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

இந்த விருது, விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர்.

வேதி​யியல் துறை பேராசிரியர் தலப்​பில் பிரதீப் விஞ்​ஞான் ஸ்ரீ விருதும், எலெக்ட்​ரிக்​கல் இன்​ஜினியரிங் துறை பேராசிரியர் மோக​னசங்​கர் சிவபிர​காசம், கம்ப்​யூட்​டர் சயின்ஸ் மற்​றும் இன்​ஜினியரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகியோர் விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர் விருதும் பெறுகின்​றனர்.

தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்ள பேராசிரியர்​கள் மூவருக்​கும் ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். இது தொடர்​பாக அவர் கூறும் ​போது, “அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் துறை​களில் சிறப்​பாகப் பங்களிப்பு செய்​தவர்​களுக்கு வழங்​கப்​படும் உயர்ந்த விரு​தான தேசிய அறி​வியல் விருதுக்கு எங்​கள் பேராசிரியர்​கள் தேர்​வுசெய் யப்​பட்​டிருப்​பது பெரு​மை​யாக​வும் கவுர​வ​மாக​வும் இருக்​கிறது.

அவர்​களின் சாதனை​யானது நாட்​டின் அறி​வியல், தொழில்​நுட்ப வளர்ச்​சி​யில் சென்னை ஐஐடி​யின் அர்ப்​பணிப்பை மீண்​டும்​ உறு​திப்​படுத்​துகிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x