Published : 27 Oct 2025 06:30 AM
Last Updated : 27 Oct 2025 06:30 AM

ஓமந்​தூ​ரார் மருத்​து​வ கல்​லூரி​யில் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு நவ.14 வரை விண்​ணப்​பிக்​கலாம்

சென்னை: சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்​னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

இந்த பாடப்​பிரிவு​களுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்​ணப்​பமில்லா நேரடி சேர்க்கை முறை​யிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்​பட்டு வரு​கின்​றன.

இது தொடர்​பான கூடு​தல் விவரங்​கள் https://gmcomu.ac.in/ என்ற இணை​யதளத்​தி​லும், ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் அறி​விப்​புப் பலகை​யிலும் இடம் பெற்​றுள்​ளன. அதன்​படி 17 வயதை நிறைவு செய்​து, தேர்​வுக் குழு​வால் பரிந்​துரைக்​கப்​பட்ட, 10-ம் வகுப்பு அல்​லது மேல்​நிலைப் பள்ளி படிப்​பில் தேர்ச்சி பெற்ற விண்​ணப்​ப​தா​ரர்​கள் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் அலு​வல​கத்​தில் விண்​ணப்​பங்​களைப் பெற்று வரும் நவ.14-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். கலந்​தாய்​வின் போது ஒதுக்​கீடு ஆணை​கள் அந்த இடத்​திலேயே வழங்​கப்​படும் என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x