Published : 26 Oct 2025 12:47 AM
Last Updated : 26 Oct 2025 12:47 AM

தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு 

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழக சட்​ட மசோதா திரும்​பப் பெறப்​பட்டு உரிய மறுஆய்வு செய்​யப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார்.

கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரின்​போது அறி​முகப்​படுத்​தப்​பட்ட தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் (திருத்​தம்) சட்ட மசோதா தொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் (திருத்த) சட்​டமசோதா குறித்து சமூக ஊடகங்​களி​லும், பொது வெளி​யிலும் பல்​வேறு கருத்​துகள் தெரிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில் இதுகுறித்து சில விவரங்​களைத் தெரிவிக்க விரும்​பு​கிறேன். அதி​க​மான எண்​ணிக்​கை​யில் உயர்​கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கப்​படு​வதற்​கான தேவை உள்​ளது. இந்​தச் சூழ்​நிலை​யில் தற்​போது இயங்​கிவரும் தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களாக உயரும்​போதும், புதி​தாக தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் தொடங்​கு​வதற்​கும் சில வழி​முறை​களை எளிமைப்​படுத்​தும் நோக்​கத்​துக்​காகவே இந்​தச் சட்​டமசோதா கொண்டு வரப்​பட்​டது.

அதேசம​யம் மாணவர்​கள் நலனோ, பணி​யாற்​றும் ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​கள் நலனோ எந்த வகை​யிலும் பாதிக்​கப்​ப​டாத வண்​ணம் உரிய சட்ட பாது​காப்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தற்​போதுள்ள தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டம் 2019, பிரிவு 4-ன்​படி, தனி​யார் பல்​கலைக்​கழகம் நிறுவ குறைந்​த​பட்ச நில அளவு 100 ஏக்​கர் தொடர்ச்​சி​யான நிலம் தேவைப்​படு​கிறது. ஆனால் மாநக​ராட்​சி, நகராட்சி மற்​றும் பேரூ​ராட்​சிப் பகு​தி​களில் அத்​தகைய மிகப்​பெரிய அளவி​லான நிலத்தை அடை​யாளம் காண்​பது மிக​வும் கடினம்.

எனவே, வேக​மாக நகரமய​மாகி வரும் தமிழகத்​தில் நிலங்​களின் மதிப்​பும் உயர்ந்து வரு​வ​தால் புதிய பல்​கலைக்​கழகங்​களைத் தொடங்​கு​வதற்​கும், பெரிய கல்​லூரி​கள் பல்​கலைக்​கழகங்​களாக தங்​களை மாற்​றிக்​கொள்​ள​வும், தரம் உயர்த்​திக்​கொள்​ள​வும் முயற்​சிக்​கும்​போது நில அளவின் தேவை சவாலாக உள்​ளது. பிற அண்டை மாநிலங்​களில் இருந்​தும் கருத்​துகள் பெறப்​பட்​டன. எனவே, உயர்​கல்​வியை மேலும் மேம்​படுத்த நிலங்​கள் தொடர்​பான விதி​முறை​களை எளிமைப்​படுத்த இந்த சட்​ட மசோதா கொண்டு வரப்​பட்​டது.

ஆசிரியர் நியமனம் மற்​றும் மாணவர் சேர்க்​கை​யில் இடஒதுக்​கீட்டை பின்​பற்​று​வது, கல்விக் கட்​ட​ணத்தை அரசே நிர்​ண​யிப்​பது, பணி​யாளர் நலனை பாது​காப்​பது போன்ற அம்​சங்​களை உத்​தர​வாதப்​படுத்​தி​யும், கல்​லூரி​கள் அடுத்த உயர்​நிலையை எட்​டு​வதற்​காக​வும் சட்​டத்​திருத்​தம் கொண்டு வரப்​பட்​டது. அதே​நேரத்​தில், மாநில இடஒதுக்​கீட்டு உரிமையை கருத்​தில் கொள்​ளாத நிகர்​நிலைப் பல்​கலைக் ​கழகங்​களுக்கு இது​வரை அரசு அனு​மதி அளிக்​க​வில்​லை.

இருப்​பினும், இப்​பொருள் குறித்து பேர​வை​யில் உறுப்​பினர்​கள் சிலர் தெரி​வித்த கருத்​துக்​களின் அடிப்​படை​யிலும், சமூக ஊடகங்​களி​லும், பொது வெளி​யிலும் தெரிவிக்​கப்​பட்​டுள்ள கருத்​துகளின் அடிப்​படை​யிலும் இந்​தச் சட்​டமசோதா குறித்து கல்​வி​யாளர்​கள், துறை சார்ந்த வல்​லுநர்​கள், கல்​வித்​துறை அலு​வலர்​கள் ஆகியோரின் கருத்​துகளைப் பெற்​று, அதன் அடிப்​படை​யில் உரிய மேல் நடவடிக்கை எடுக்​கப்​படும். எனவே இந்​தச் சட்​டமசோதா திரும்​பப் பெறப்​பட்டு உரிய மறு ஆய்வு செய்​யப்​படும்​.இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x