Published : 25 Oct 2025 06:08 AM
Last Updated : 25 Oct 2025 06:08 AM

வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு நீதிபதி கற்பகவிநாயகம் அறிவுரை 

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப்பேராயம் விருதுகளைப் பெற்றவர்களுடன் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பகவிநாயகம், பல்கலை. வேந்தர் பாரிவேந்தர் உள்ளிட்டோர்.

காட்​டாங்​கொளத்​தூர்: ​வாழ்க்​கை​யில் பண்​புள்​ளவர்​களாக நடந்​து​கொள்ள வேண்​டும் என்று நீதிபதி மு.கற்​பக​வி​நாயகம் மாணவர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் தமிழ்ப்​பே​ரா​யம் விருதுகள் வழங்கப்படு ​கின்​றன. சிறுகதைகள், அறி​வியல், நாடகம், மொழிபெயர்ப்பு என பல்​வேறு துறை​களில் சிறந்த நூல்​களைத் தேர்வு செய்​து, 11 படைப்​பாளி​களுக்கு தமிழ்ப்​பே​ரா​யம் விருதும், பணமுடிப்​பும் வழங்​கப்​படும்.

இதன்படி, 15-வது ஆண்டு விருது வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. தமிழ்ப்​பே​ரா​யம் புர​வலரும், எஸ்​ஆர்​எம் பல்​கலை. வேந்தரு​மான பாரி வேந்​தர் தலைமை வகித்​தார். தமிழ்ப்​பே​ரா​யம் தலை​வர் கரு.​நாக​ராசன் வரவேற்​றார். மொத்​தம் 11 தலைப்புகளில், ரூ.11.90 லட்​சம் மதிப்​பிலான தமிழ்ப்​பே​ராய விருதுகளை ஜார்க்​கண்ட் மாநில உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி மு.கற்​பக​ வி​நாயகம் வழங்​கி​னார்.

புது​மைப்​பித்​தன் படைப்​பிலக்​கிய விருது எழுத்​தாளர் சுரேஷ்கு​மார இந்​திரஜித், பார​தி​யார் கவிதை விருது கவிஞர் இளம்​பிறை, அழ.வள்​ளியப்பா குழந்தை இலக்​கிய விருது எழுத்​தாளர் மருதன், ஜி.​யு.​போப் மொழிபெயர்ப்பு விருது கே.பத்​மஜா நாராயணன், அப்​துல் கலாம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப விருது முனை​வர் சசிக்​கு​மார், பரி​தி​மாற் கலைஞர் தமிழ் ஆய்​வறிஞர் விருது எழுத்​தாளர் அமுதன், முத்​தமிழறிஞர் கலைஞர் சமூகநீதி விருது எழுத்​தாளர் பிருந்தா சீனி​வாசன் மற்​றும் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக ஆசிரியர் தேவ​தாசன், சுதேசமித்​திரன் தமிழ் இதழ் விருது ஆசிரியர் வதிலை பிர​பா, தொல்​காப்​பியர் தமிழ்ச் சங்க விருது செல்​லப்​பன், அருணாசலக் கவி​ராயர் விருது மு.வெ.ஆடலரசு, பாரிவேந்​தர் பைந்​தமிழ் வாழ்​நாள் சாதனை​யாளர் விருது கோ.தெய்​வ​நாயகம் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது.

விழா​வில் நீதிபதி மு. கற்​பக​வி​நாயகம் பேசி​ய​தாவது: எஸ்​ஆர்​எம் பல்​கலை. 40 ஆண்​டு​களாக வெற்​றிக் கொடி நாட்​டி​யுள்​ளது. மாணவர்​கள் வாழ்க்​கை​யில் ஏதாவது சாதிக்க வேண்​டும். கல்வி நிறு​வனங்​கள் கல்​வியை மட்​டுமின்​றி, ஒழுக்​கத்​தை​யும், பொறுப்​புணர்ச்​சி​யை​யும் கற்​றுத் தர வேண்​டும்.

மாணவர்​கள் வாழ்க்​கை​யில் பண்​புள்​ளவர்​களாக நடந்​து​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். பல்​கலை. வேந்​தர் பாரிவேந்​தர் பேசும்​போது, “சிறுகதைகள், அறி​வியல், நாடகம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்​வேறு துறை​களில் சிறந்த நூல்​களைத் தேர்வு செய்​து, அவற்​றின் படைப்​பாளி​களுக்கு விருதும், பணமுடிப்​பும் வழங்​கப்​படு​கிறது.

இது​வரை ரூ.3 கோடிக்​கும் மேல் விருதும், பணமுடிப்​பும் வழங்​கி​யுள்​ளோம். தமிழ் எழுத்​தாளர்​கள், உணர்​வாளர்​கள், அறிஞர்​களைப் பாராட்ட வேண்​டும் என்​ப​தற்​காக இது​போன்ற நிகழ்​வு​கள் நடத்​தப்​படு​கின்​றன” என்​றார். நிகழ்ச்​சி​யில், பல்​கலை. ப​தி​வாளர் சு.பொன்​னு​சாமி, எஸ்​ஆர்​எம் வளாக நிர்​வாகி இரா.அருணாச்​சலம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தமிழ்​ப்​பே​ரா​யம் செயலர் பா.ஜெய்​கணேஷ், உதவிப் பேராசிரியர் மு.​பாலசுப்​பிரமணி நிகழ்​ச்​சியை தொகுத்து வழங்​கி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x