Published : 25 Oct 2025 07:25 AM
Last Updated : 25 Oct 2025 07:25 AM
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்பட்டது.
தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களின் வசதிக்காக, அக்.21-ம் தேதி (செவ்வாய்) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் இன்று (அக்.25) சனிக்கிழமை பணி நாளாக அனுசரிக்கப்படும். செவ்வாய்க்கிழமை பாடவேளை அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT