Published : 20 Oct 2025 08:09 AM
Last Updated : 20 Oct 2025 08:09 AM

நள்ளிரவு 12 மணி வரை ‘புராஜெக்ட்’ செய்யும் சிறுவன்

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்​தவர் நிதின் எஸ்.தர்​மாவத். அவரது மகன் அங்​குள்ள சிபிஎஸ்இ பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

அவர் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்​ளார். அதில், ‘‘பள்​ளி​கள் பயனற்​றவை. தற்​போது நள்​ளிரவு 12 மணி ஆகிறது. எட்​டாம் வகுப்பு படிக்​கும் எனது மகன் ஹோம்​வொர்க் பாடங்​களை முடித்​து​விட்டு ‘பு​ராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்​டாள்​தன​மான வேலைகளை செய்து கொண்​டிருக்​கிறார்.

இதை செய்து முடித்​தால்​தான் உடற்​கல்வி வகுப்​புக்கு செல்ல அனு​மதி வழங்​கப்​படு​கிறது. இதன்​ காரண​மாகவே ஒவ்​வொரு நாளும் நள்​ளிரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்​திருந்து எனது மகன் ‘பு​ராஜெக்ட்​’களை செய்து கொண்​டிருக்​கிறார்.

ஒரு தந்​தை​யாக என்​னால் எதை​யும் தடுத்து நிறுத்த முடிய​வில்​லை. அழுகிப் போன அமைப்​பால் எனது இயலாமையை உணர்​கிறேன். நான் எதற்கு எதி​ராக போராடினேனோ, இப்​போதும் அதையே எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கிறது’’ என்றார். அவரது வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x