Published : 14 Oct 2025 06:43 AM
Last Updated : 14 Oct 2025 06:43 AM

மாணவர்கள் தொழில்முனைவோராக செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்: மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி அறிவுரை

எஸ்ஆர்எம் பல்கலை.யின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலை. வளாகத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் நிறுவனர், வேந்தர் பாரிவேந்தர், இணை வேந்தர் சத்யநாராயணா, அகமதாபாத் ஐஐஎம் இயக்குநர் பாரத் பாஸ்கர் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் |

காட்டாங்கொளத்தூர்: தொழில் முனை​வோ​ராக செயல்​பட்டு மாணவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு பாடுபட வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார். செங்​கல்​பட்டு மாவட்​டம், காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள எஸ்​ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் 21-ம் ஆண்டு பட்​டமளிப்பு விழா நிறுவன வளாகத்​தில் உள்ள கலையரங்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​கு, எஸ்​ஆர்​எம் நிறு​வனர் மற்​றும் வேந்​தர் டி.ஆர். பாரிவேந்​தர் தலைமை தாங்கினார்.

துணைவேந்​தர் பேராசிரியர் சி. முத்​தமிழ்ச்​செல்​வன் வரவேற்​புரை ஆற்றி ஆண்டு அறிக்​கையை தாக்​கல் செய்​தார். சிறப்பு விருந்தின​ராக மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்று பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பம், அறி​வியல் மற்​றும் மனிதநே​யம், மருத்​து​வம் மற்​றும் சுகா​தார அறி​வியல், மேலாண்​மை, சட்​டம் மற்​றும் வேளாண் அறி​வியல் ஆகிய பிரிவு​களில் முனை​வர், இளங்​கலை மற்​றும் முதுகலை பட்​டப்​படிப்பு மற்​றும் டிப்​ளமோ படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடித்த 15,105 மாணவ - மாணவிகளுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். அகம​தா​பாத்​ இந்​திய மேலாண்மை நிறு​வனத்​தின் இயக்​குநர் பேராசிரியர் பாரத் பாஸ்​கருக்கு டாக்​டர் பட்​டம் வழங்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் நிதின் கட்​கரி பேசி​யது: பட்​டம் பெற்ற அனைத்து மாணவர்​களை​யும் வாழ்த்​துகிறேன் பாராட்​டு​கிறேன். மாணவரின் வெற்​றிக்கு உறு​தி​யாக இருந்த பெற்​றோரை வாழ்த்​துகிறேன். எஸ்​ஆர்​எம் கல்வி நிறு​வனம் இந்​தி​யா​வில் சிறந்த கல்வி நிறு​வன​மாக விளங்​கு​கிறது.

பட்​டம் பெற்ற மாணவர்​களாகிய நீங்​கள் பொறுப்​புள்ள குடிமக​னாக இருப்​பது மிக முக்​கி​யம். மாணவர்​களாகிய நீங்​கள்தான் இந்​தி​யா​வின் எதிர்​காலம். இந்​தி​யா​வில் தான் திறமை வாய்ந்த பொறி​யாளர்​கள் ஏராள​மாக உள்​ளனர். பொருளா​தா​ரத்​தில் இந்​தியா வேக​மாக வளர்ந்து வரு​கிறது. உலக அளவில் மூன்​றாம் இடத்​தில் இருக்​கிறோம் ஒவ்​வொரு துறை​யி​லும் ஆராய்ச்சி என்​பது மிக​வும் முக்​கி​யம். நம்​முடைய கலாச்​சா​ரத்​தால் உலக அளவில் நாம் உயர்ந்து நிற்​கிறோம்.

அறிவு மட்​டுமின்றி கலாச்​சா​ர​மும் முக்​கி​யம். சமூக சூழல் பலரை மாற்​றுகிறது. சமூகப் பொறுப்பு மாணவர்​களுக்கு முக்​கி​யம். நம்​முடைய மருத்​து​வர்​கள், பொறி​யாளர்​களுக்கு உலக அளவில் நல்ல மரி​யாதை உள்​ளது. ஏபிஜே டாக்​டர் அப்​துல் கலாம் போன்று, மாணவர்கள் சாதனை புரிய வேண்​டும்.

பட்​டம் பெறு​வது முக்​கியமல்ல அனை​வரும் தொழில்​முனை​வோ​ராக செயல்​பட்டு இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு பாடு​பட வேண்​டும் என்​றார். நிகழ்ச்​சி​யில் இணை வேந்​தர்​கள் ரவி, சத்​ய​நா​ராயணன், எஸ்​ஆர்​எம் வளாக தலை​வர் சிவகு​மார், ரா​மாபுரம் மற்​றும் திருச்சி எஸ்​ஆர்​எம் வளாக இணை தலை​வர் நிரஞ்​சன், தேர்வு கட்​டுப்​பாட்​டாளர்​ குணசேகரன்​, பதி​வாளர்​ பொன்​னுச்​சாமி பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x