Published : 13 Oct 2025 12:48 AM
Last Updated : 13 Oct 2025 12:48 AM

மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு 

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். கல்​லூரி​யில் பட்​டப் படிப்​பையோ அல்​லது பட்​டமேற்​படிப்​பையோ முடிக்​கும் மாணவர்​களுக்கு அனைத்து செமஸ்​டர் மதிப்​பெண்​களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ், மாற்​றுச் சான்​றிதழ் உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், சென்னை பல்​கலைக் கழகத்​தில் பட்​டப்​படிப்பை முடிக்​கும் மாணவர்​களுக்கு கடந்த 3 ஆண்டு கால​மாக மதிப்​பெண் சான்​றிதழ்​கள், புர​விஷனல் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட​வில்​லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்​கள் மேற்​படிப்பை தொடர்​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்​து, பல்​கலைக்​கழக அதி​காரி​களிடம் விசா​ரித்த போது, நிதி நெருக்​கடி காரண​மாகத்​தான் மாணவர்​களுக்கு உரிய நேரத்​தில் சான்​றிதழ்​களை வழங்க முடிய​வில்​லை. பல்​கலைக்​கழக நிதிக்​குழு, எழுதுபொருள் மற்​றும் அச்சு செல​வினங்​களுக்​கான நிதியை குறைத்​து​விட்​டது" என்றனர். பல்​கலைக்​கழக பதி​வாளர் ரீட்டா ஜாண் கூறும்​போது, " இது​வரை மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ் பெறாத மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​கான பணி​களை தொடங்கி​விட்​டோம்" என்​றார். அதே​போல், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் சி.அருள்​வாசு கூறுகை​யில், "முதுகலை மாணவர்​களுக்​கான சான்​றிதழ்​கள் அச்​சிடப்​பட்​டு​விட்​டன. இளங்​கலை மாணவர்​களுக்​கு சான்​றிதழ்​ அச்​சிடும்​ பணி​யும்​ தொடங்​கப்​பட்​டு விட்​டன" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x