Published : 11 Oct 2025 12:19 AM
Last Updated : 11 Oct 2025 12:19 AM

நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: ​அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) ஆகிய பதவி​களில் 1,996 காலி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஜூலை 10-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப்​ப​திவு அன்​றைய தினமே தொடங்கி ஆக.12-ம் தேதிமுடிவடைந்​தது. தேர்​வுக்கு 2 லட்​சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களுக்கு கடந்த செப்​.30-ம் தேதி ஹால்​டிக்​கெட் வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வு, தமிழகம் முழு​வதும் நாளை (ஞா​யிறு) நடை​பெறுகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதி​யம் 1.30 மணிக்கு முடிவடை​யும். பாடத்​தேர்​வுடன் சேர்த்து கட்​டாய தமிழ்​மொழி தகு​தித்​தாள் தேர்​வும் நடை​பெறும்.
இதனிடையே, பு​திய பாடத்​திட்​டத்​தின் அடிப்​படை​யில் இந்த தேர்வு நடத்​தப்​படு​வ​தா​ல், தேர்​வுக்கு தயா​ராகும் வகையில் தேர்​வைத் தள்​ளிவைக்க வேண்​டும் என விண்​ணப்​ப​தா​ரர்​கள் பலர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர்.

இந்த வழக்​கு​கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஆசிரியர் தேர்வு வாரி​யம் தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஆர்​.நீல​கண்​டன், தேர்வை தள்​ளி​வைத்​தால் பாதிப்பை ஏற்​படுத்​தும்​ என்​றார். அதையடுத்து நீதிப​தி, தேர்வை தள்​ளிவைக்க உத்​தர​விட முடி​யாது, எனக் கூறி வழக்​கு​களை தள்​ளு​படி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x