Published : 08 Oct 2025 06:11 AM
Last Updated : 08 Oct 2025 06:11 AM

ஏஐ பயன்பாட்டுக்கான விதிமுறைகள் விரைவில் வெளியீடு: சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தகவல் 

சென்னை: சென்னை ஐஐடி வத்​வானி டேட்டா சயின்ஸ் மற்​றும் ஏஐ ஆய்வு மையம் சார்​பில் ஏஐ ஆளுமை தொடர்​பான மாநாடு, கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இதுகுறித்​து, வத்​வானி டேட்டா சயின்ஸ் மையத்​தின் பேராசிரியர் ரவீந்​திரன் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் ஏஐ தொழில்​நுட்​பம் பாது​காப்​பாக பயன்​படுத்​தும் வகை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படும். ஏஐ தொழில்​நுட்​பம் என்​பது ஒரு கரு​வி. அதில் கிடைக்​கும் தகவல்​கள் எப்​போதும் சரி​யாக இருக்​கும் என்​பது கிடை​யாது.

இதுகுறித்​து, மக்​களுக்கு தெளி​வாக கூற வேண்​டும். பெரிய நிறு​வனங்​கள் ஏஐ தொழில்​நுட்​பத்​தில் தயார் செய்​யப்​பட்​டது என்ற தகவலுடன் மக்​களுக்கு அளிக்க வேண்​டும். அதன் பின்​னர், அதனை பயன்​படுத்​து​வர்​களுக்கு பிரச்​சினை வந்​தால் அது அவர்​கள் பொறுப்​பு.

அவ்​வாறு தெரிவிக்​காமல் கூறி​னால் அதில் தவறு இருந்​தால் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கூடிய வழி​முறை​கள் இருக்க வேண்​டும். அதற்​காக ஏஐ தொழில்​நுட்​பத்​தில் விதி​களை கொண்​டுவர உள்​ளோம்.

இந்​தி​யா​வில் இணைய தொழில்​நுட்​பங்​கள் பயன்​பாட்​டுக்கு சரி​யான விதி​முறை​கள் இல்​லாமல் உள்​ளன. அவற்றை பாது​காப்​பாக பயன்​படுத்​து​வதற்​கான விதி​முறை​கள் வகுக்​கப்​பட்​டுள்​ளன. அவற்றை மத்​திய அரசு விரை​வில் வெளி​யிட உள்​ளது. மேலும்​, ​காப்​புரிமை சட்​ட​மும்​ மறுசீரமைப்​பு செய்​யப்​பட உள்​ளது. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x