Published : 05 Oct 2025 05:05 AM
Last Updated : 05 Oct 2025 05:05 AM

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசு தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் தரநிலை அறிக்​கையை பயன்​படுத்த வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின்​கீழ் நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் தரநிலை அறிக்கை அச்​சிட்டு அனைத்து மாவட்​டங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பள்​ளி​களுக்கு பிரித்து வழங்க வேண்​டும். இந்த அறிக்​கையை எவ்​வாறு பயன்​படுத்த வேண்​டும் என்​பது குறித்து வழி​காட்​டு​தல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​மாறு தலைமை ஆசிரியர்​களை அறி​வுறுத்த வேண்​டும்.

இதுத​விர, தரநிலை அறிக்​கை​யில் மாணவர்​களின் அடிப்​படை விவரங்​களை நிரப்​பி, அவரது பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை ஒட்ட வேண்​டும். ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மொத்த வேலை நாட்​கள், மாணவர் பள்​ளிக்கு வந்த நாட்​களின் எண்​ணிக்​கையை நிரப்ப வேண்​டும். திறன் அடிப்​படையி​லான பகு​தி​கள், மொழித் திறன்​கள், கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் திறன்​களில் குழந்​தை​யின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்​டும்.

இதே​போல, கல்வி இணைச் செயல்​பாடு​கள், விளை​யாட்டு பங்​கேற்​பு, குழுப்​பணி, படைப்​பாற்​றல் போன்ற பகு​தி​களில் குழந்​தை​யின் ஈடு​பாட்டை கருத்​தில் கொண்​டு, அதற்​கான தரநிலையை பதிவுசெய்ய வேண்​டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்​பு, பெற்​றோரின் கருத்​துப் பதிவு, கையொப்​பம் போன்ற பகு​தி​களும் இடம்​பெற்​றுள்​ளன. மதிப்​பெண் அட்​டையை பெற்​றதும் பெற்​றோர் தங்​கள் கருத்​துகளை எழுத ஊக்​கமளிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x