Published : 03 Oct 2025 12:23 AM
Last Updated : 03 Oct 2025 12:23 AM

மத்திய அரசு நிதி வழங்கியதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை

சென்னை: மத்​திய அரசு நிதி வழங்​கியதைத் தொடர்ந்து தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்கை மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்​ட​வர்​களில் தகு​தி​யான மாணவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டின்​கீழ் பதிவு செய்​வதற்​காக 10 நாள் காலஅவ​காசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். மாநிலம் முழு​வதுமுள்ள 8 ஆயிரத்​துக்​கும் மேலான தனி​யார் பள்​ளி​களில் சுமார் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாக படிக்​கலாம். தமிழகத்​தில் 2013-ல் அமலான இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின்​கீழ் இது​வரை 4 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, தேசிய கல்விக்கொள்​கையை தமிழகம் ஏற்க மறுப்​ப​தால் பள்​ளிக்​கல்​வித் துறை திட்​டங்​களுக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. அதில், ஆர்​டிஇ திட்ட நிதி​யும் ரூ.600 கோடி வரை வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக நடப்புகல்​வி​யாண்​டில் (2025-26) தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்​கையை தொடங்​கு​வதற்கு தமிழக அரசு ஒப்​புதல் வழங்​க​வில்​லை. இதனால் பெற்​றோர்​கள் பலர் தங்​களின் சொந்த செல​வில் பிள்​ளை​களை தனி​யார் பள்​ளி​களில் சேர்த்​து​விடும் நிலை உரு​வானது. மேலும், ஏற்​கெனவே சேர்க்கை பெற்ற குழந்​தைகளை கல்விக் கட்​ட​ணம் செலுத்​த​வும் பள்ளி நிர்​வாகங்​கள் வற்​புறுத்​து​வ​தாக குற்றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

உச்ச நீதி​மன்​ற​ம் அறிவுறுத்தல்: இந்​நிலை​யில், இந்த விவ​காரம் குறித்த வழக்​கில் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி மத்​திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்​டுமென உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. உச்ச நீதி​மன்​ற​மும் சில அறி​வுறுத்​தல்​களை வழங்​கியது. தொடர்ந்து ஆர்​டிஇ திட்​டத்​தில் தனது பங்​களிப்பு நிதியை மத்​திய அரசு சமீபத்​தில் விடு​வித்​தது. இதையடுத்​து, தனி​யார் பள்​ளி​களில் இலவச சேர்க்கை மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்ட மாணவர்​களில் தகு​தி​யானவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டில் பதிவு செய்​வதற்​காக 10 நாள் காலஅவ​காசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தனி​யார் பள்​ளி​களில் நடப்பு 2025–26-ம் கல்​வி​யாண்​டுக்​கான ஆர்​டிஇ மாணவர் சேர்க்கை நடை​முறை​கள் தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது குழந்​தைகள் கல்வி பயிலும் அதே பள்​ளி​யில் இந்த கல்​வி​யாண்​டுக்​கான சேர்க்கை மேற்​கொள்​ளப்​படும். ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்ட மாணவர்​களில் தகு​தி​யானவர்​களை அடை​யாளம் கண்டு ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டின் கீழ் பள்​ளி​யின் முதல்​வர்​கள் பதிவு செய்ய வேண்​டும்.

இந்த திட்​டத்​தின்​கீழ் வாய்ப்பு மறுக்​கப்​பட்ட மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிந்த பிரி​வினர்​களை தேர்​வுசெய்ய வேண்​டும். வாய்ப்பு மறுக்​கப்​பட்ட பிரி​வில் வரும் ஆதர​வற்​றவர்​கள், எச்​ஐ​வி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர், 3-ம் பாலினத்​தவர், மாற்​றுத் திற​னாளி​கள், துப்​புர​வுத் தொழிலா​ளர்​களின் குழந்​தைகள் ஆகியோ​ருக்கு முன்​னுரிமை வழங்க வேண்​டும். நலிந்த பிரி​வினர் ஆண்டு வரு​மானம் ரூ.2 லட்​சத்​துக்கு குறை​வாக இருக்க வேண்​டும். இடங்​களை​விட விண்​ணப்​பங்​கள் அதி​க​மா​னால் குலுக்கல் நடை​முறை பின்​பற்​றப்​படும்.

அதே​போல, ஆர்​டிஇ தகு​தி​யுடைய மாணவர்​களிடம் எந்த கட்​ட​ண​மும் வசூலிக்​கக்​கூ​டாது. ஏற்​கெனவே கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டிருந்​தால், 7 நாட்​களுக்​குள் திருப்​பிச் செலுத்த வேண்​டும். பள்​ளி​யின் நுழைவு வகுப்​பில் இது​வரை சேர்க்கை பெற்ற குழந்​கைளின் மொத்த எண்​ணிக்​கையை அக்​டோபர் 7-ம் தேதிக்​குள் பதிவேற்ற வேண்​டும். அதில், ஆர்​டிஇ சேர்க்​கைக்கு தகு​தி​யான மாணவர்​களின் சான்​றுகளை அக்​.9-ல் பதிவுசெய்ய வேண்​டும். தொடர்ந்து தற்​காலிக தகு​திப் பட்​டியல் வரும் 10-ம் தேதி​யும், இறு​திப்​பட்​டியல் 14-ம் தேதி​யும் வெளி​யிடப்​படும். மேலும், இடங்​களை​விட அதிக மாணவர்​கள் இருப்​பின் குலுக்​கல் வரும் 16-ல் நடத்​தப்​படும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்ளது.

இந்​தாண்டு ஆர்​டிஇ சேர்க்​கைக்கு பெற்​றோர்​கள் நேரடி​யாக விண்​ணப்​பிக்க முடி​யாது. பள்ளி முதல்​வர்கள் மூல​மாக மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அமைச்சர் கருத்து: இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில், ‘கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்தை முடக்​கும் வகை​யில் செயல்​பட்​டு​வரும் மத்​திய அரசுக்கு எதி​ராக முதல்​வர் ஸ்டா​லின் வழி​காட்​டு​தலின்​படி, உயர் நீதி​மன்​றம், உச்ச நீதி​மன்​றம் வரை சென்று வாதாடியதன் விளை​வாக நமக்​குரிய நிதியை பெற்​றுள்​ளோம். எனவே, கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நடை​முறை​கள் தற்​போது தொடங்​கு​கின்​றன. கல்​வியை பறிக்க எத்​தனை தடைகள் வந்​தா​லும்​, நம்​ தி​ரா​விட மாடல்​ அரசு முறியடிக்​கும்​’ என்​று கூறியுள்​ளார்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x